games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023

விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் வீரருக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பிய குஜராத் ரசிகர்கள்

விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக் கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடை பெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனி யன்று நடைபெற்ற 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் துடிப் பான பந்துவீச்ச்சை சமாளிக்க முடி யாமல் 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை (192) எளிதாக எட்டியது. “ஜெய் ஸ்ரீராம்” 33-ஆவது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் சென்ற பொழுது குஜராத் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டு ரிஸ்வானை வெறுப் பேற்றினர். ஆனால் ரிஸ்வான் கண்டு கொள்ளாமல் பெவிலியன் சென்றார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

அமைச்சர் உதயநிதி கண்டனம்

பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான “ஜெய் ஸ்ரீராம்”  சம்பவம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர்(எக்ஸ்) பக்கத்தில் அவர் கூறியதாவது, “இந்தியா  விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. ஆனால் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரருக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. விளை யாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்கவேண்டும். உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் இயக்குநர் அதிருப்தி

போட்டி முடிந்த பின்பு பாகிஸ்தான் இயக்கு நர் மிக்கி ஆர்தர் (தென் ஆப்பிரிக்கா நாட்டவர்) கூறுகையில்,”இது ஐசிசி நடத்தும் போட்டியா அல்லது பிசிசிஐ நடத்தும் போட்டியா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. போட்டிக்கு இடையில் ஒருமுறை கூட “தில் தில்  பாகிஸ்தான்” என்ற முழக்கங்களை கேட்க முடியவில்லை. அதே நேரத்தில் தோல்விக்கு இது ஒரு காரணம் என்றும் சொல்லவில்லை. இந்திய அணிக்கு ஆதரவாக மட்டுமே அனைத்து ஏற்பாடுகளும் இருந்தன. ஓர் இடத்தில் கூட பாகிஸ்தான் அணிக்காக சப்போர்ட்டை பார்க்க முடியவில்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்த பொழுதே சர்ச்சை  வெடித்தது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவின் மதவெறி அரசியலின் முழுகட்டுப் பாட்டில் உள்ள குஜராத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமா? என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்த  நிலையில், முன்கூட்டியே சுதாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், குஜராத் மாநிலத்தில் விளையாடி னால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் விளையாட அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது.

மதவெறிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு மட்டும் வாழ்த்து

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்கும் முன் நரேந்திர மோடி மைதான நிர்வாகம் ஜெய் ஸ்ரீராம்  பாடல்களை ஒலிக்கப்பட்டன. தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த பொழுது குஜராத் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்டனர். இந்த இரண்டு சம்பவங்களையும் நாட்டின் அனைத்து தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு மட்டும் வாழ்த்து கூறி, மதவெறிக்கு ஆதரவாக வும், ஊக்குவிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளார். நடப்பு சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா இதுவரை 3 லீக்  ஆட்டங்களில் விளையாடி மூன்றி லும் வெற்றியை ருசித்தது. முதல்  லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியையும், 2-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்திய நிலையில், சனின்று நடைபெற்ற 3-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. முதல் 2 லீக்  போட்டிகளில் வாழ்த்து தெரிவிக்காமல் பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு மட்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி “அகமதாபாத்தில் இன்று இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றி க்கு பாராட்டுகள். இனி வரும் போட்டி களுக்கும் வாழ்த்துகள்” என தெரி வித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதி ரான வெற்றிக்கு மட்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருப்பதன் மூலம் பிரதமர் மோடி சமூக வலைத்தளங் களில் வறுபட்டு வருகிறார்.

ஆறுதல் அளித்த இந்திய வீரர்கள்

அரசியல், மதவெறி ஆதாயத்துக்காகவே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் நடத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்தியா வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களு டன் பெரியளவில் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. வெற்றி கொண்டாட்டத்தில் மட்டுமே சிறியளவு சீண்டல் இருந்தது. மற்றபடி இந்தியா - பாகிஸ்தான் என இரு நாட்டு வீரர்கள் சகோதர உணர்வுடனேயே மைதானத்தில் இருந்தார்கள். போட்டி முடிந்த பின்பு இந்திய வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமிடம் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை வழங்கினார். இருவரும் கட்டியணை த்து வாழ்த்து தெரிவித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். பல்வேறு சர்ச்சை சம்பவங்களுக்கு இடையே இது சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

இன்றைய ஆட்டம்

ஆஸ்திரேலியா - இலங்கை

இடம் : ஏகானா மைதானம், உ.பி.,
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)