விளையாட்டு உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-ஆவது சீசன் இந்தியாவில் அக்டோபர் 5 அன்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் 10 மைதானங்களில் நடைபெற்ற நிலையில், நவம்பர் 12 அன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேறின. முதல் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியும், 2-ஆவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2:00 மணிக்கு நடைபெறுகிறது.
பரபரப்பாக நடைபெறும்
2003இல் கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து கோப்பையை இழந்தது. இதற்கு பதிலடியுடன் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், 6-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் கோப்பையின் மீது குறியாக களமிறங்குவதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
ஆஸ்திரேலியா
உலகக்கோப்பையில் நேருக்கு நேர்
5 வெற்றி - 8 வெற்றி
வெற்றி வாய்ப்பு
50% 50%இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்), ஹாட் ஸ்டார் (ஓடிடி - ஸ்மார்ட்போனில் இலவசம், ஸ்மார்ட் டிவிகளில் சந்தா கட்டணம் இருந்தால் மட்டுமே)
மழை : வாய்ப்பில்லை
புலியா? கங்காருவா?
இந்தியா - ஆஸ்திரேலியா என அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் ஒரே சேர சரிசமமான பலத்துடன் உள்ளது. இதனால் இந்த அணிதான் கோப்பையை கைப்பற்றும் என உறுதி யாக எதுவும் கூற முடியாது. இருப்பினும் பலவீனத்தில் இரு அணிகளும் பல்வேறு மைனஸ் பாயிண்டுகளை வைத்து யாருக்கு கோப்பை என 50% கணிக்கலாம்.
பலவீனம் :
இந்தியா
துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டரில் கோலி ஆட்டமிழந்தால் மற்ற பேட்டர்கள் பதற்றமாக பேட்டிங் செய்து விரைவில் ஆட்டமிழக்கின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் ரோஹித், ஷ்ரயாஸ், சூர்யகுமார் ஆகியோரை நம்ப முடியாத சூழல் உள்ளது. முக்கியமாக 6 பேட்டர்கள் மட்டுமே உள்ளனர். ஜடேஜாவு க்கு பிறகு கீழ் வரிசையில் உள்ள 5 வீரர்களில் யாருக்கும் ஆஸ்திரேலியாவை போல திடமான பேட்டிங் திறன் கிடையாது. ஆஸ்திரேலிய கீழ் வரிசை வீரர்களில் 10 பேர் (வரிசை) வரை கூட பேட்டிங் செய்வார்கள். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக உள்ளது. பேட்டிங் இப்படி என்றால் பந்துவீச்சில் ஷமி, குல்தீப் மட்டுமே நல்ல பார்மில் அபார மாக பந்துவீசி உள்ளனர். பும்ரா, ஜடேஜா ஓரளவு நன்றாக பந்துவீசினாலும் ரன்களை வாரி வழங்குகின்றனர். சிராஜ் டெத் ஓவர்களில் சொதப்புகிறார். இது 2-ஆவது மைனஸ் பாயிண்டாகும்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணியில் 7 பேர் கொண்ட பலமான பேட்டிங் ஆர்டர் இருந்தாலும் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்ஷ், ஸ்மித் ஆகியோர் மட்டுமே திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த 4 பேரில் யாராவது ஒருவர் வீழ்ந்தால் அணியில் பதற்ற நிலை உருவாகிறது. அதாவது பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டாய் சரிந்து விடுகிறது. ஆடம் ஜம்பா மட்டும் சூழலில் ஜொலிக்கும் நிலையில், வேகப்பந்துவீச்சில் மிரட்டலான வீரர்கள் இருந்தாலும் யாரும் கட்டுக்கோப்பாக பந்துவீசுவதில்லை. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிலநேரங்களில் மட்டும் அபாரமாக பந்துவீசுகிறார்.
10% வாய்ப்பு?
இரு அணிகளிலும் பலவீனங்கள் சற்று மாறுபட்ட வகையில் இருக்கின்றன. சொந்த மண்ணில் தனிக்காட்டு ராஜாவாக இருப்பதால் 2011 போல உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கும் சகலவாய்ப்புகள் உள்ளன. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக மாறும் திறன் ஆஸ்திரேலிய அணியிடம் இருப்பதால் அந்த அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு 10% அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் - ரூ. 33 கோடி (கோப்பை, பதக்கங்களுடன்)
2-ஆம் இடம் - ரூ.16 கோடி (பதக்கங்களுடன்)
அரையிறுதி தோல்வி - இரண்டு அணிக்கு தலா ரூ. 6 கோடி (நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா)
லீக் சுற்று வெளியேற்றம் - ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 83 லட்சம் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து)
தகுதி சுற்று வெளியேறிய அணிகளுக்கு - தலா ரூ.33 லட்சம் (45 அணிகளுக்கு)
இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்பு
உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு அகமதாபாத் மைதானத்திற்கு வருகிறார்கள். இறுதி போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படை சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.