2021 ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கான 4 பேர் பட்டிலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சிறந்த வீராங்கனை விருக்கான கடைசி நான்கு பேர் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இதில் இங்கிலாந்தின் டேமி பியுமோன்ட், தென்ஆப்பிரிக்காவின் லிஜேல் லீ, அயர்லாந்தின் கோபி லீவிஸ் ஆகியோர் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
25 வயதான வலது கை தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2022 ஆம் ஆண்டில் 22 சர்வதேச போட்டிகளில் 38.86 என்ற சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியவுக்கு எதிரான தொடரில் ஸ்மிருதி மந்தனா நல்ல தொடர்பில் இருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடங்கி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார். அவர் தனது வாழ்க்கையின் முதல் டெஸ்டில் ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். மேலும் "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருதை பெற்றார்.