வினிசியஸ் ஜூனியருக்கு பாலன் டி’ஓர் விருது வழங்க மறுப்பு விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த ரியல் மாட்ரிட்
சர்வதேச கால்பந்து உலகில் மிக வும் உயரிய விருதான பாலன் டி’ஓர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி 68ஆவது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள “தியேட்டர் டு சாட்லெட் அரங்கில்” திங்க ளன்று நடைபெற்றது. ஆடவர் பிரிவிற் கான பாலன் டி’ஓர் விருது பிரிவில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி (மான்செஸ்டர் சிட்டி கிளப் - இங்கிலாந்து), பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட் கிளப் - ஸ்பெயின்), இங்கி லாந்து அணி வீரர் ஜூட் பெல்லிங்காம் (ரியல் மாட்ரிட் கிளப் - ஸ்பெயின்) ஆகி யோருக்கு இடையே கடும் போட்டி நில வியது. இறுதியில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி பாலன் டி’ஓர் விருதிற்கு தேர்வு செய்யப்படுவதாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. ரசிகர்கள் அதிர்ச்சி மெஸ்ஸி (அர்ஜென்டினா), ரொனால் டோ (போர்ச்சுக்கல்), நெய்மார் (பிரேசில்) ஆகிய முன்னணி நட்சத்தி ரங்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வினிசியஸ் ஜூனி யருக்கு (பிரேசில்) நடப்பாண்டுக்கான பாலன் டி’ஓர் விருது கண்டிப்பாக கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரிக்கு அறி விக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பாரபட்சமான முடிவு என சமூக வலைத்தளங்களில் கால்பந்து ரசிகர்கள் கண்டனம் தெரி வித்து மீம்ஸ்களை வெளியிட்டு வரு கின்றனர். ரியல் மாட்ரிட் புறக்கணிப்பு அதே போல ஸ்பெயின் கிளப் அணி யான ரியல் மாட்ரிட், தனது அணியின் நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனி யருக்கு பாலன் டி’ஓர் விருது வழங்க மறுத்ததற்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும் பாலன் டி’ஓர் விருதுக்கு ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டதை அறிந்து கொண்டு விருது வழங்கும் நிகழ்வையும் ரியல் மாட்ரிட் அணி புறக் கணித்தது. தங்கள் நாட்டு அணிக்கு பாலன் டி’ஓர் விருது கிடைத்தாலும், தனது கிளப் அணி வீரருக்கு விருது மறுக்கப்பட்டதற்கு ரியல் மாட்ரிட் அணி விருது வழங்கும் நிகழ்வை புறக் கணித்ததன் மூலம் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடானா பான்மடிக்கு டபுள் மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங் கனை ஐடானா பான்மடி இரண்டாவது முறையாக பாலன் டி’ஓர் விருதை வென்றார். கடந்த ஆண்டும் ஐடானா பான்மடி பாலன் டி’ஓர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை கிடையாது பாலன் டி’ஓர் விருது பெற்ற வருக்கு என்று தனிப்பட்ட முறையில் பரிசுத் தொகை கிடையாது. மாறாக அணி ஒப்பந்தம் ஸ்பான்சர் உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அவருக்கு தனி யாக போனஸ் என்பது வழங்கப்படு கிறது. மேலும் விளையாட்டு சார்ந்த விருது விழாவில் வாழ்நாள் முழுவதும் கலந்து கொள்ள ஏதுவாக பாஸ் வழங்கப்படுகிறது.
புரோ கபடி 2024 முதலிடத்திற்கு முன்னேறுமா தமிழ் தலைவாஸ்?
குறுகிய காலத்தில் பிரபல மடைந்த புரோ கபடி தொடரின் 11ஆவது சீசனில் தற்போது தொடக்கச் சுற்று லீக் ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. தொடக்கச் சுற்று ஆட்டங்கள் தெலுங்கானா தலைநகர் ஹைதரா பாத்தில் நடைபெற்று வரும் நிலையில், புதனன்று 2 லீக் ஆட்டங்கள் நடை பெறுகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் - தமிழ் தலைவாஸ் அணிகளும், 2ஆவது ஆட்டத்தில் உ.பி., யோதாஸ் - ஹரியானா அணிகளும் மோது கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் அணியை வீழ்த்தினால் புள்ளிப்பட்டியலில் முத லிடத்திற்கு முன்னேறும். அதே போல உ.பி., யோதாஸ், ஹரியானாவை வீழ்த்தினாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு கள் உள்ளன. ஹரியானா, குஜராத் அணி கள் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டிய லில் மேல்நோக்கி முன்னேறும். இவ்வாறு 4 அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் புதனன்று நடைபெறும் புரோ கபடி லீக் ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
தமிழ் தலைவாஸ் - குஜராத்
நேரம் : இரவு 8 மணி
* * *
ஹரியானா - உ.பி., யோதாஸ்
நேரம் : இரவு 9 மணி
இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி மைதானம், ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஹாட் ஸ்டார் (ஒடிடி)