games

img

விளையாட்டு...

புனே டெஸ்ட் இந்திய அணி மீண்டும் திணறல் வலுவான நிலையில் நியூஸி.,

3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸி லாந்து கிரிக்கெட் அணி இந்தியா விற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெங்களூரு) நியூஸி லாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேயில் வியாழனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த  சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் - அஸ்வின் ஜோடி வலுவான தாக்குதல் மூலம் நியூஸிலாந்து அணியை 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு சுருட்டியது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக கான்வே 76 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். சான்ட்னர் சுழலில் சரிந்த இந்தியா தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோகித் சர்மா வை (0) இழந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 11 ஓவர் களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16  ரன்கள் எடுத்து இருந்தது. ஜெய்ஸ் வால் (6), கில் (10) களத்தில் உள்ள னர். வெள்ளியன்று தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில், நியூஸிலாந்து அணியின் மூத்த வீரர் சான்ட்னர் சுழற்பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் மிக மோசமான அளவில் திணறினர். ஜடேஜா (38), ஜெய்ஸ்வால் (30), கில் (30) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப் பிடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னி ங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணி  தரப்பில் சான்ட்னர் 7 விக்கெட்டு களையும், பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை யும், சவுத்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி நிதான வேகத்தில் ரன் சேர்த்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 எடுத்து, 301 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. பிளண்டல் (30), பிலிப்ஸ் (9) ஆகியோர் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸை போலவே அசத்தலாக பந்துவீசிய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சனியன்று தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஒரு ஆட்டத்தில் சொதப்பினால் நீக்குவதா?
கே.எல்.ராகுல் நீக்கத்திற்கு வலுக்கும் கண்டனம்

பெங்களூரில் நடைபெற்ற முதல்  டெஸ்ட் போட்டியில் இந்த அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் ஆடும் லெவனில் சீர்திருத்தம் என்ற பெயரில் மூத்த வீரர்  கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப், சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களு க்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் ஆடும் லெவ னில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் சொதப்பியதற்காக மூத்த வீரர் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப், சிராஜ் ஆகியோரை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் எப்படி ஆட்டமிழந்தார், ஒரு வீரர் எப்படி பந்துவீச்சில் சொதப்பினார், சம்மந்தப்பட்ட வீரர் என்ன தவறு செய்தார்? இதனை சரி செய்ய பயிற்சி யில் என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு பயிற்சி யாளர்கள் சம்மந்தப்பட்ட வீரர்களுக் கான அடுத்தக் கட்ட பயிற்சியை தொடங்குவார்கள். சொதப்பல் தொடர் ந்தால் அடுத்த தொடரில் தான் அவரை சேர்ப்பது குறித்து பரிசீலனையும் செய் வார்கள். இதுதான் கிரிக்கெட் விளை யாட்டின் மரபு ஆகும்.  மற்றபடி ஒரு ஆட்டத்தின் சொதப்பல் களுக்கு எல்லாம் ஆடும் லெவனில் இருந்து திடீரென நீக்க மாட்டார்கள். ஆனால் இந்திய அணி நிர்வாகமோ, பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சொதப் பியதற்காக மூத்த வீரரும், கேப்டன் அந்தஸ்து இடத்தில் இருப்பவருமான கே.எல்.ராகுல் மற்றும் முன்னணி வீரர் களான குல்தீப், சிராஜை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீரின் உத்தரவால் தான் இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கும் என கிரிக்கெட் வல்லு நர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.