தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதனன்று கேப்டவு னில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜின் வேகத்தை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக திணறினர். முகமது சிராஜுடன் பும்ரா, முகேஷ் ஒருபக்கம் மிரட்ட தென் ஆப்பிரிக்க மிடில் ஆர்டர் மட்டுமின்றி, வெறும் 55 ரன்களில் மொத்த பேட்டிங் ஆர்டரும் சரிந்தது. அதாவது தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் டேவிட் (12), கெயில் (15) ஆகிய 2 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக முகமது சிராஜ் 6 விக்கெட்டு களும், பும்ரா , முகேஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மைதான பிட்சில் புற்கள் : இந்திய அணியும் திணற வாய்ப்பு இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணி கள் விளையாடி வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூ லாண்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இந்த மைதானத்தின் பிட்ச் பகுதிகளில் கூட அடர்த்தியான அளவில் புற்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாகவே வேகப்பந்துவீச்சு தாறு மாறாக எகிற தென் ஆப்பிரிக்க அணி சொற்ப ரன்னில் நிலைகுலைந்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சு ஒருபக்கம் என்றாலும், மைதான பிட்சில் இருக்கும் புற்களாலும் தென் ஆப்பிரிக்கா மிக குறைந்த ரன்னில் சுருண்டது என்ற மற்றொரு கார ணமும் இருப்பதால், தென் ஆப்பிரிக்க அணியைப் போலவே இந்திய அணி யும் பந்துவீச்சில் திணறவாய்ப்புள்ளது.
இன்று 2-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா இருந்தால் மட்டுமே)
பிரிஸ்பேன் டென்னிஸ் : சபலென்கா அபாரம்
டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் (ஆஸ்திரேலியா) மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனை யும், அதிரடிக்கு பெயர் பெற்ற பெலாரஸ் வீராங்கனையான சபலென்கா இத்தாலியின் லூசியாவை 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சபலென்காவைப் போல முன்னணி வீராங்கனைகளான ரைபகினா (கஜகஸ்தான்), ஒஸ்டாபென்கா (லாத்வியா), பிளிஸ்கோவா (செக்குடியரசு), கசட்கினா (ரஷ்யா), வெரோனிக்கா (ரஷ்யா) ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், உலகத் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை சம்சோனோவா அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத்தரவரிசையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் ஹம்பர்ட், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
புரோ கபடி 2023 : இன்று விடுமுறை
புரோ கபடி தொடரின் 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் புதனன்று நிறைவு பெற்ற நிலையில், வழக்கமான அணிகள் மற்றும் போட்டி அமைப்பின் இடம்பெயர்வு காரணத்திற்காக புரோ கபடி தொடருக்கு வியாழனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வெள்ளியன்று நடைபெறுகிறது.