games

img

விளையாட்டு - பாரீஸ் ஒலிம்பிக்

மைக்ரோசாப்ட் கோளாறு ; ஒலிம்பிக் தொடரின் சர்வர்களும் பாதிப்பு

மைக்ரோசாப்ட் நிறு வனத்தின் “விண் டோஸ்” இயங்குதளத்தின் தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக உல களவில் ஐடி மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மைக்ரோசாப்ட் கோளாறு கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வரும் நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் சர்வர்களும் மைக்ரோசாப்ட் கோளாறால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.  போட்டி தொடங்கும் முன்பே மைக் ரோசாப்ட் கோளாறு கண்டுபிடிக்கப் பட்டதால் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. “இனி மைக்ரோசாப்ட் கோளாறு ஏற்பட்டாலும் எங்களுக்கு கவலை யில்லை. நாங்கள் சோதனை மூலம் மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டோம்” என பாரீஸ் ஒலிம்பிக் தொட ரின் பொறுப்பாளர்கள் தகவல் தெரி வித்துள்ளனர்.  தொழில்நுட்பக் கோளாறு அல்லது சைபர் தாக்குதலால் ஒலிம்பிக் பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2018இல் நடைபெற்ற  பியோங்சாங் (தென் கொரியா) குளிர்கால ஒலிம்பிக் தொட ரும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ-க்குள் நாள்தோறும் மோதல் கேப்டனை நீக்க கம்பீருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய கிரிக்கெட் வல்லுநர்கள்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒருநாள் (3), டி-20 (3) போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க அடுத்த வாரம் இலங்கை  நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடருக்கான இந்திய  அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி தேர்வில் பல்வேறு சர்ச்சை கிளம்பியுள்ளன.  அதாவது சூப்பர் பார்மில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங்,  ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகி யோர் நீக்கப்பட்டு, தனது ஆதரவு  மற்றும் பிடித்தமான நபர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளார் கம்பீர். குறிப்பாக டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பணியாற்றிய ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஓய்வால் இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியின் அடுத்த கேப்ட னாக களமிறக்கப்படுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிட்னஸ் கார ணத்தைக் கூறி இலங்கை அணிக்கு எதி ரான டி-20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக சூர்ய குமாரும், துணைக் கேப்டனாக சப்மன் கில்-லும்  நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா நீக்கத்திற்கு புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தான் காரணம் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. “2 ஆண்டுகள் அனைத்து டி-20 போட்டியிலும் விளை யாடும் வகையிலான வீரருக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும்” என  கம்பீர் தேர்வுக்குழுவினரிடம் கூறிய தால், ஹர்திக் பாண்டியா நீக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. கேப்டனை நீக்க கம்பீருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நலன்  நிலையில் உள்ள ஹர்திக் பாண்டி யாவை எப்படி நீக்க முடியும்? என கிரிக்கெட் வல்லுநர்கள்கேள்வி மேல் கேள்வி எழுப்பி, ஹர்திக் பாண்டியா விற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

அதிரடி பேட்டரும், பகுதி நேர பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். தொடக்க இடத்தை தவிர்த்து மற்ற அனைத்து வரிசையிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்யவும் திறன் பெற்றவர். குறிப்பாக 130 கிமீ முதல் 140 கிமீ வரையிலான வேகத்தில் பந்து  வீசக்கூடியவர். மும்பை, குஜராத் அணிக் காக கேப்டன் பொறுப்பை ஏற்று விளை யாடிய அனுபவம் உடையவர். அனுப வத்தில் சீனியரான ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பது நல்லது என்ற நிலையில், பிட்னஸ் பற்றி விளக்கம் ஏதும்  கூறாமல் அவரை அணியில் இருந்து நீக்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.