செஸ் ஒலிம்பியாட் மேடையில் இந்திய தங்கங்கள் நாடு முழுவதும் குவியும் பாராட்டு
45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் செப்., 11 அன்று தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரி வில் (ஆடவர்) 195 அணிகளும், பெண் கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்ற நிலையில், ஓபன், மகளிர் என இரண்டு பிரிவிலும் இந்திய நட்சத்திரங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 சுற்று முடிவில் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் ஆகி யோர் அடங்கிய இந்திய ஓபன் அணி 21 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. இந்த பிரி வில் அமெரிக்கா (17 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், உஸ்பெகிஸ் தான் (17 புள்ளிகள்) வெண்கலப்பதக்க மும் வென்றன. அதே போல வைசாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர் வால், தனியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி 11ஆவது சுற்று முடிவில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தி யது. இந்த பிரிவில் கஜகஸ்தான் (18 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா (17 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றன. இதனைத் தொடர்ந்து இந்திய அணி யின் குகேஷ் மற்றும் தனியா சச்தேவ் ஆகிய இருவரும் தங்களது பிரிவு களுக்கு வழங்கப்பட்ட செஸ் ஒலிம்பி யாட் கோப்பையை வாங்கிவிட்டு, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா எப்படி நடந்து வந்து சக வீரர்களி டம் உலகக்கோப்பையை கொடுத்த னரோ, அதேபோன்ற கொண்டாட்டத்து டன் கோப்பையை கொடுத்து துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
10இல் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
43ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் ஆகிய 5 பேரும், மகளிர் பிரிவில் வைசாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தனியா சச்தேவ் ஆகிய 5 பேர் என மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். இந்த 10 பேரில் குகேஷ் (சென்னை), பிரக்ஞானந்தா (சென்னை), வைசாலி (சென்னை) ஆகிய 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதே போல 10 பேரில் தமிழ்நாட்டின் 3 பேரைச் சேர்த்து 6 பேர் தென்னிந்திய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கங்ளும்... மாநிலங்களிலும்...
குகேஷ் (தமிழ்நாடு), பிரக்ஞானந்தா (தமிழ்நாடு), வைசாலி (தமிழ்நாடு). அர்ஜூன் எரிகைசி (தெலுங்கானா), விதித் (மகாராஷ்டிரா), ஹரிகிருஷ்ணா (ஆந்திரா), ஹரிகா (ஆந்திரா), திவ்யா தேஷ்முக் (மகாராஷ்டிரா), வந்திகா அகர்வால் (தில்லி), தனியா சச்தேவ் (தில்லி).
மாஸ்டர் பிளான் கேப்டனாக அசத்திய தமிழ்நாட்டின் குகேஷ்
ஹங்கேரியில் நடைபெற்ற 43ஆவது செஸ் ஒலிம்பி யாட்டின் இந்திய அணியின் இரு பிரிவுக்கும் மாஸ்டர் பிளான் கேப்டனாக தமிழ்நாட்டின் குகேஷ் திறம்பட பணியாற்றி தங்கம் வெல்ல உதவியுள்ளார். ஒவ்வொரு சுற்றிலும் ஓபன், ஆடவர் பிரிவுகளின் போட்டிகளை கண்காணித்து, ஒரு சுற்றுப் போட்டி முடிந்த பின்பு அடுத்த சுற்றுக்கு எப்படி தயாராகுவது என ஆலோசனைகளை அளித்து இந்திய அணி இரட்டை தங்கப்பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டின் குகேஷ்.