games

img

யு19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா  

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில்  இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.  போட்டியின் தொடக்கத்திலேயே, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். இறுதியாக இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களுக்குள், 189 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைசதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ரன்கள் எடுத்தார்.    

அதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களைக் குவித்தது.  

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.