games

img

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிறிஸ்டன், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் கேரி கிறிஸ்டன் விலகியுள்ளார். பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் எடுக்கும் சில முடிவுகள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும், இதன் காரணமாகவே அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாகவும், கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது; பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். அவரது இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகியுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் பயிற்சியாளரான ஜேசன் கில்லெஸ்பி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.