games

img

விளையாட்டு...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சராக “சூதாட்ட நிறுவனம்”

“ட்ரீம் லெவன்” நிறுவனம் ரூ.358 கோடிக்கு ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக இருந்த ஆன்லைன் கல்வி நிறுவனமான “பைஜு’ஸின் (BYJU’S) ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் வரை நிறைவடைந்த நிலை யில், ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்நிறுவ னம் விரும்பவில்லை.  இந்நிலையில், புதிய முதன்மை ஸ்பா ன்சர் தேர்வுக்கு பல முன்னணி நிறுவனங் கள் போட்டியிட்ட நிலையில், உலகின் முக்கிய பணக்கார நிறுவனங்களுள் ஒன்றும், பிரபல சூதாட்ட நிறுவனமான “ட்ரீம் லெவன் (DREAM 11)” நிறுவனம் ரூ.358 கோடிக்கு முதன்மை ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த வாரம் தொடங்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணி யின் ஜெர்சியில் “ட்ரீம் லெவன்” விளம்பரம் இடம்பெறும் எனவும், 3 ஆண்டு காலத்தி ற்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என இந்திய கிரிக்கெட் வாரி யம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரி வித்துள்ளது.

“ட்ரீம் லெவன்” சூதாட்ட நிறுவனம்

கடந்த 2008இல் ஹர்ஷ் ஜெயின், பவித் ஷெத் ஆகியோர் நாட்டின் நிதிநிலை தலை நகரான மும்பையில் “ட்ரீம் லெவன்” என்ற பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் பேண்டஸி நிறுவனத்தை தொடங்கினர். தொடக்கத்தில் இந்நிறுவனம் பற்றி ஸ்மார்ட் உலகில் யாருக்கும் தெரியாது. கொரோனா லாக் டவுன் கால கட்டத்தில் பிரபலமான “ட்ரீம் லெவன்” தற்போது முன் னணி நிறுவனமாக வளர்ந் துள்ளது. அதாவது ஆண்டு க்கு ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதன் மூலம் உலகின் பணக்கார நிறு வனங்களில் ஒன்றாக “ட்ரீம் லெவன்” முளைத்துள்ளது.

சூதாட்ட ஸ்டைல்

“ட்ரீம் லெவன்” சூதாட்ட நிறு வனம் என்பது பணம் வைத்து விளையாடும் நவீன பேண்டஸி வகை சூதாட்டம் (யுனிகார்ன் கிளப்) ஆகும். அதாவது ஆன்லைன் ரம்மி போல பண இழப்பை ஏற்படுத் தும் விளையாட்டு பிரிவு ஆகும்.  உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டின் ஒரு போட்டி யில் குறிப்பிட்ட பணம் செலுத்தி இரு அணிகளில் இருந்து 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய் யப்பட்ட வீரர்களுக்கு, அவர்க ளின் ஆட்டத்திறனை பொ றுத்து புள்ளிகள் வழங்கப் படும். யார் அதிக புள்ளிகளை பெறுகிறார்களோ ரேங்க் அடிப்படையில் வெற்றி பெற்ற வர்களுக்கு லட்சம், கோடி என  பல மடங்கு பணம் அளிப்ப தாக விளம்பரத்தில் கூறப்படு கிறது. ரேங்கில் இல்லை என்றால் கட்டிய பணம் தரப்படமாட்டாது. பணம் பெற்ற நபர்கள் “ட்ரீம் லெவன்” விளம்பரங்க ளில் மட்டுமே காட்டப்படுகிறது. நேரில் யாரும் இதுவரை “ட்ரீம் லெவன்” சூதாட்டத்தில் பணம் பெற்றதாக வாய் திறந்த தில்லை. இதனை அறியாமல் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் இளசுகள், இளை ஞர்கள் தங்களுக்கும் பணம்  கிடைக்கும் என போட்டி போட்டு கொண்டு ட்ரீம் லெவனில் பணத்தை இழக்கிறார்கள்.  மக்களை ஏமாற்றி சம்பா தித்த பணத்தின் மூலம்தான் “ட்ரீம் லெவன்” இன்று இந்திய அணியின் ஸ்பான்சராக வளர்ந்துள்ளது. நாட்டில் “ட்ரீம் லெவன்” மட்டுமல்ல 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பேண்டஸி வகை சூதாட்டத்தில் கொடி கட்டி பறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டைமண்ட் லீக் தடகளம்

நீரஜ் சோப்ராவிற்கு தங்கம்

சுவிட்சர்லாந்து நாட்டின் லாசானே நகரில் டைமண்ட் லீக் தடகள தொடரின் ஈட்டி எறிதல் இறுதி சுற்றின் 5-வது வாய்ப்பில் இந்தி யாவின் நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். டைமண்ட் லீக் தடகள தொடரில் நீரஜ் சோப்ரா விற்கு இது இரண்டாவது தங்கம் ஆகும்.  ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் வெள்ளிப்பதக்கமும் (87.03 மீ), செக் குடியரசின் ஜாக்குப் வாட்லெஜ் (86.13 மீ) வெண்கலப்பதக்கமும் வென்றனர். அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான கிரனடாவின் ஆண்டர் சன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி (82.23 மீ) 5-வது இடத்தை பிடித்து அதிர்ச்சி அளித்தார்.