games

img

விளையாட்டு...

தொடர்ந்து விதிமீறல் திக்வேஷ் ராத்திக்கு ஐபிஎல் போட்டியில் தடை

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக்  ஆட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற நிலையில், அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, லக்னோ அணியை வெளியேற்றியது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்து லக்னோ வீரர் திக்வேஷ் ராத்தி பந்துவீச்சில் ஆட்டமி ழந்தார். வழக்கம் போல திக்வேஷ் ராத்தி “நோட் புக்” ஸ்டைலில் “வெளியே போ”  என ஸ்லெட்ஜிங் செய்தார். இந்த செயல்  அபிஷேக் ஷர்மாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அபிஷேக் சர்மா நேரடியாக திக்வேஷ் ராத்தியுடன்  மோதலில் ஈடுபட்டார். இதனால் இரு வருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் இரு வீரர் களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஆக் ரோஷமாக முன்னேறினர். இருப்பினும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட் மற்றும் களத்தில் இருந்த நடுவர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியும், அபிஷேக் சர்மாவை பெவிலியனுக்கும் அனுப்பி வைத்தனர்.

திக்வேஷ் ராத்திக்கு தடை

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட திக்வேஷ் ராத்திக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே போல அபிஷேக் சர்மா முதன்முறையாக இந்த ஆண்டு  ஐபிஎல் தொடரில் விதிமீறல் செய்திரு க்கிறார். அதனால் அவருக்குப் போட்டி  சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு டிமெரிட் (தகுதி யிழப்பு) புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

திக்வேஷ் ராத்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு நாள் விதிவிலக்கு?

திக்வேஷ் ராத்தி “நோட் புக்” கொண் டாட்டத்துக்காக இரண்டு முறை அப ராதம் கட்டியுள்ளார். அதன்பிறகு கையில் எழுதாமல் மைதான பிட்சில் எழுதி “நோட் புக்” கொண்டாட்டத்தை தொடர்ந்தார். நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. லக்னோ அணி நிர்வாக மும் அமைதி காத்தது. தற்போது மீண் டும் கையில் “நோட் புக்” கொண்டாட்ட த்தை வெளிப்படுத்தி அபிஷேக் ஷர்மா வுடன் மோதியுள்ளார். ஐபிஎல் நிர்வாகம் திக்வேஷ் ராத்தி யை மட்டும் இவ்வளவு நாள் கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. திக்வேஷ் ராத்தி சர்வதேச தொடர்களில் இவ்வாறு தொடர்ச்சியாக செய்து இருந்தால் நீண்டகால தடை உத்தரவை எதிர் கொண்டு இருப்பார். ஆனால் ஐபிஎல் நிர்வாகம் திக்வேஷ் ராத்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு நாள் விதிவிலக்கு  அளித்திருந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திக்வேஷ் ராத்திக்கு ராஜீவ் சுக்லா இறுதி எச்சரிக்கை?

போட்டி முடிந்த பிறகு திக்வேஷ் ராத்தி -  அபிஷேக் சர்மாவை அழைத்து பிசிசிஐ துணை செயலாளரும், ஐபிஎல் நிர்வாகக்குழு உறுப்பின ருமான ராஜீவ் சுக்லா மத்தியஸ்தம் மேற்கொண்டார். அதன்பிறகு,”விளையாட்டுக்குப் பிறகு நான் அவர்களிடம் பேசினேன். இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. பெரியளவில் பிரச்சனை இல்லை” என்று கூறினார். எனினும் மீண்டும் இதுபோல தொடர்ந்தால் ஐபிஎல் தொடரில் விளை யாட முடியாத நிலைமை ஏற்படும் என திக்வேஷ் ராத்தியை ராஜீவ் சுக்லா எச்சரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்

தில்லி - மும்பை

நேரம் : இரவு 7:30 மணி இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)