கிரிக்கெட்டிலும் மதம் சார்ந்த பிரச்சனையை கையிலெடுக்கும் பாஜக மும்பை ஜிம்கானா கிளப்பில் கிறிஸ்தவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் நீக்கம்
நாட்டின் மிக பழமையான கிளப்புகளில் ஒன்றான ஜிம் கானா கிளப் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்கானா கிளப்பில் கவுரவ உறுப் பினராக இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரி க்ஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அக்டோபர் 20 அன்று (ஞாயிறு) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஜிம்கானா கிளப்பில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸை நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை வாசித்த ஜிம்கானா கிளப் தலைவர் விவேக் தேவ்னானி, “ஜெமிமா ரோட்ரிக்ஸின் தந்தை இவான், மேனுவல் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்தவ அமைப்புடன் இணைந்திருக் கிறார். ஜிம்கானா கிளப் வளாகத்தை “மத நடவடிக்கைகளுக்காக (ஜெபம் செய்ய)” இவான் பயன்படுத்தியது எங்களுக்குத் தெரிய வந்தது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக பிரசிடென்ஷியல் ஹாலை முன்பதிவு செய்து 35 மதம் சார்ந்த நிகழ்ச்சி களை நடத்தியுள்ளனர். நாடு முழு வதும் மதமாற்றங்கள் பற்றி கேள்விப் படுகிறோம். ஆனால் அது நமது கண் முன்னேயே நடக்கிறது. ஜிம்கானா வின் விதி 4ஏ-இன் படி, எந்த மத நடவடிக்கைகளையும் அனுமதிப்ப தில்லை. இந்த சம்பவத்திற்கு ஜிம்கானா கிளப்பில் உள்ள சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெமிமா ரோட்ரிக்ஸை ஜிம்கானா கிளப்பில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்” என அவர் கூறினார். இதற்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் தரப்பு ஜிம்கானா கிளப் வளாகத்தில் மதம் சார்ந்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாஜகவின் தூண்டு தல் காரணமாகவே கிறிஸ்தவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜிம்கானா கிளப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அந்த கிளப்பின் சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிரிக்கெட்டிலும் மதம் சார்ந்த பிரச்ச னையை கையிலெடுக்கும் பாஜகவின் அரசியலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளால் வந்த வினை
கோபத்தில் வங்கதேசத்தை புரட்டியெடுக்கும் தென் ஆப்பிரிக்கா
ஆடவர் உலகக்கோப்பை டி-20 தொடர் முடிந்த பின்பு தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து, ஆப் கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளிடம் ஒருநாள், டெஸ்ட், டி-20 என 3 போட்டி களைக் கொண்ட தொடர்களில் பங்கேற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளு டன் டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை முற்றிலுமாக இழந்து ஒயிட் வாஷ் ஆனது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதன்பிறகு வந்த அயர்லாந்து அணி தொடரை வெல்லாவிட்டாலும் ஒரு ஒருநாள், ஒரு டி-20 ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு கோபத்தை கிளறி விட்டுச் சென்றது. கழுவி ஊற்றிய ரசிகர்கள், ஊடகங்கள் 9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பையை இழந்த கடுப்பில் இருந்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள், “சிறிய அணிகளிடம் கூட தோல்வியை தழுவு வது மிக மோசமானது. விளையாட தெரி யுமா தெரியாதா?” என எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து விட்டனர். தென் ஆப்பிரிக்கா ஊடகங்களும் விளையாட்டு செய்தி தொகுப்பு என்ற பெயரில் அந்நாட்டு அணியை விமர்ச னங்கள் மூலம் பந்தாடியது. சிக்கிக்கொண்ட வங்கதேசம் இதனால் ஆத்திரமடைந்த தென் ஆப்பிரிக்கா விமர்சனங்களுக்கு பதி லடி கொடுக்கவும், நாங்கள் யாரென்று நிரூபிக்கவும் கடந்த13 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இத்த கைய சூழலில் தான் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் சிக்கிக் கொண்டது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் (வங்கதேச தலை நகர் டாக்காவில் நடைபெற்று வரு கிறது) முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை தனது ஆக்ரோஷ பந்து வீச்சால் முதல் இன்னிங்சில் 106 ரன்களி லும், 2ஆவது இன்னிங்ஸில் 300 ரன் களுக்குள் சுருட்டியது. தங்கள் நாட்டு ரசி கர்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங் களுக்கு பதிலடி என்ற பெயரில் வங்கதே சத்திடம் தனது முழு பார்மை வெளிப் படுத்தி வருவதால், வங்கதேச அணி தென் ஆப்பிரிக்கா அணியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. மைண்ட் வாய்ஸ் - வங்கதேசம் ஜூனியர் வீரர்களை களமிறக்கி அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகளிடம் அடி மேல் அடி வாங்கி, அதற்கு பதிலடி என்ற பெயரில் எங்களை புரட்டியெடுப்பது நியாயமா? என்ற மைண்ட் வாய்ஸுடன் வங்க தேசம் விளையாடி வருவது மிகவும் சோகமான விஷயம் ஆகும்.