பயிற்சியின் பொழுதே இந்திய வீரர்களுக்கு காயம் மிரட்டும் ஆஸ்திரேலிய மைதானங்கள்
பார்டர் - காவஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் (5 டெஸ்ட் போட்டி) ஆஸ்திரேலியாவில் நவம்பர் 22 அன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மைதா னங்கள் மிரட்டலான வேகப்பந்து வீச்சு க்கு சாதகமானது என்பது அனைவருக் கும் தெரிந்த விசயம் என்ற நிலையில் பயிற்சியின் பொழுதே இந்திய வீரர்கள் காயமடைந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது நிகழ்ந்துள்ளன. 3 நாட்களுக்கு முன் இந்திய அணி யின் நட்சத்திர அதிரடி வீரர் கே.எல். ராகுல் பயிற்சி ஆட்டத்தில் (இந்திய வீரர்களுக்கு இடையே) காயமடைந் தார். தொடர்ந்து வீரர் சப்மன் கில்லும் காயமடைந்துள்ளார். கே.எல்.ராகுலை விட சப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால், அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடுவது சிரமம் என்றும், கில்லுக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தின் பொழுதே இந்திய வீரர்கள் காயத்து டன் திணறி வருவது பிசிசிஐ தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் போட்டி யின் பொழுது இந்திய அணி மிக மோசமான அளவில் திணற வாய்ப்புள் ளது என செய்திகள் வெளியாகி வரு கின்றன. காரணம் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொந்த மண்ணிலும், உயி ரோட்டமாக உள்ள ஆடுகளங்களில் மிக மூர்க்கமாக விளையாடுவார்கள் என்பதால், பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பல்வேறு சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என விளையாட்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாடு நியூஸிலாந்து வீரர்களுக்கு சிக்கல்?
இந்தியாவில் ஐபிஎல் போல நியூ ஸிலாந்து நாட்டில் சூப்பர் ஸ்மாஷ் டி-20 என்ற பெயரில் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் டக் பிரேஸ்வெல் (ஓய்வு பெற்றவர்) போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சர்ச்சை யில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சூப்பர் ஸ்மாஷ் டி-20 தொடரில் விளையாடிய பொழுது கோக்கைன் மற்றும் அதன் மெட்டா பொலிட் பென்சாயில்கோனைன் (BZE) பயன்படுத்தியுள்ளது சோதனை மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை டக் பிரேஸ்வெல் ஒப்புக்கொண்டார். இத்தகைய சூழலில் கிரிக்கெட் தொடர்பான ஈடுபாடுகளில் பங்கேற்கக் கூடாது என டக் பிரேஸ்வெலுக்கு நியூஸிலாந்தின் விளையாட்டு தீர்ப்பாயத்தால் இடைக்கால தடை (மூன்று மாதம்) விதித்துள்ளது. இந்த போதைப்பொருள் புழக்கம் தொடர்பான விவகாரம் சூப்பர் ஸ்மாஷ் டி-20 தொடருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அந்த தொடரில் விளையாடிய நியூஸிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளின் வீரர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 13 வயது சிறுவன்
18ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஐபிஎல் ஏலத்தில் 13 வயதே ஆகும் பீகார் மாநி லத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி பங்கேற்கிறார். இடது கை பேட்டரான சூர்யவன்ஷி ரஞ்சிக் கோப்பையில் பீகார் அணிக்கும், இந்திய யு-19 அணி யிலும் விளையாடி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் பங்கேற்கும் மிக இளம் வீரர் இவர்தான். அதே போல ஏலத்தில் ஏதே னும் ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு விளையாடினால் அந்நிகழ்வு மற்றொரு மைல் கல்லாக அமையும். அதா வது ஐபிஎல் தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி பெறுவார். இந்த சாத னையை தற்போது பெங்கால் வீரர் பிர யாஸ் ராய் பர்மன் வைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங் களூரு அணிக்காக விளையாடிய போது பிரயாஸ் வயது 16 வயது 157 நாட்கள் ஆகும். சமீபத்தில் ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்டில் 58 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி 2024
இரண்டு ஆட்டங்களும்:
நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம். சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)புனே- உ.பி.,யோதாஸ்
நேரம் : இரவு 8 மணி
பெங்களூரு - பாட்னா
நேரம் : இரவு 9 மணி