செவ்வாயன்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோஸ்டாரிகா வென்றதை தொடர்ந்து, கத்தாரில் 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான 32 அணிகள் களம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.
2022 கால்பந்து உலகக்கோப்பை போட்டி, கத்தாரில் 32 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்கு தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஃபிஃபா 21ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2018ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. இதில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி குரேஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் விளையாடும் 32 நாடுகள் குழுவின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன: அதன் முழு விவரம்
குரூப் ஏ – கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து
குரூப் பி – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி – அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
குரூப் டி – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ – ஸ்பெயின், கோஸ்டா ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோசியா
குரூப் ஜி – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் – போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா