புரோ கபடி 2023
10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தற்பொழுது 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. விடுமுறை நாளான ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் மும்பை - மேற்கு வங்க அணியும், 2-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு - தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இன்றைய ஆட்டங்கள்
மும்பை - மேற்கு வங்கம்
(38-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
பெங்களூரு - தெலுங்கு டைட்டன்ஸ்
(39-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
நேரு மைதானம் (எஸ்டிஏடி), சென்னை (பெரியமேடு), தமிழ்நாடு நேரடி முகவரி : ராஜாமுத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு (சென்னை சென்ட்ரல்), சென்னை - 600003.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்
பறக்கும் விகாஷ் கன்டோலா
நடப்பு சீசன் புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் விகாஷ் கன்டோலா “பறக்கும் ஸ்டைல்” ஆட்டத்தின் மூலம் எதிரணிகளை மிரட்டி வருகிறார். ரெய்டு செல்லும் பொழுது திடீரென “பிராக் ஜம்ப் (தவளை தாவல்)”தாவலில் எதிரணி வீரர்களை தொட்டு விடுகிறார். முக்கியமாக எதிரணி வீரர்கள் பிடிப்பதற்குள் எல்லைக்கோட்டை நீச்சல் தாவலில் பறந்து தொட்டு வெளியே வந்து விடுகிறார்.அதே போல தடுப்பாட்டத்தில் பாய்ந்து எதிரணி வீரர்களின் காலை உடும்புபிடியாக பிடித்துக் கொள்கிறார். இவ்வாறு பறக்கும் ஸ்டைலி லேயே விளையாடி பெங்களூரு அணிக்கு பக்க பலமாக இருக்கிறார்.
ஐபிஎல்
ஹார்திக் பாண்டியா விலகல்?
ஒருநாள் உலகக்கோப்பை தொ டரின் போது ஏற்பட்ட கணுக் கால் காயம் காரணமாக இந்திய அணி யின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா உலகக்கோப்பை அணியில் இருந்து பாதியிலேயே விலகினார். காயத்தின் வீரியம் மிக மோசமாக இருந்ததால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஹர்திக் பங்கேற்க மாட்டார் என்றும், காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹார்திக் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை அணி வாங்கி கேப்டனாக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகை மிரள வைத்த மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகள்
ஒருநாள், டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளும் இணைந்து வரலாற்றுச் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது. அதுயாதெனில் ஒரு டி-20 தொடரில் இதுவரை இல்லாத அளவில் இரு அணிகளும் 120 சிக்சர்கள் (இங்கிலாந்து - 56, மே.இ. தீவுகள் - 64) விளாசியுள்ளன. பொதுவாக ஒரு உள்ளூர் டி-20 தொடர்களிலேயே 100-க்கு மேல் சிக்சர் விளாசு வார்கள் என்ற நிலையில், சர்வதேச தொடரில் முதன்முறை யாக வெறும் 5 டி-20 போட்டிகளில் 120 சிக்சர் விளாசியி ருப்பது கிரிக்கெட் உலகில் பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது.