புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் நடுகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 5-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், 2-ஆவது ஆட்டத்தில் தமிழ்நாடு அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அசத்தலாக விளையாடும் நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ்நாடு அணி பார்ம் பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் தொடர் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 11-ஆவது இடத்தில் உள்ளது. இருப்பினும் தான் விளையாடிய கடைசி 2 லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி கடைசி வரை போராடி நூலிழை யில் வெற்றியை நழுவவிட்டது. இதனால் இனி வரும் ஆட்டங்களில் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தி டாப் ஆர்டரில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் முதல் படியாக ஞாயிறன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி பெங்களூரு அணியை வீழ்த்தும் முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது.
குஜராத் - பெங்கால்
(48-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
தமிழ்நாடு - பெங்களூரு
(49-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
பெண்களை நோட்டமிடுவதுதான் ஒளிபரப்பு நிறுவனங்களின் வேலையா?
காதல் ஜோடியை படம்பிடித்து சர்ச்சையில் சிக்கிய மெல்போர்ன் மைதான கேமராமேன்
சமீபகாலமாக விளையாட்டு உல கில் ஒரு சர்ச்சையான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதுயாதெனில் விளையாட்டு நிகழ்வுக்கு இடைவெளியில் ரசிகர்களை காண்பிக்கிறோம் என்ற பெயரில் பெண்களை நோக்கி கேமராவை திருப்பி ஒளிபரப்பும் செயல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்தாலும், ஒளிபரப்பு நிறுவனங் கள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் (ஆஸ்திரே லியாவில்) நடைபெற்றது. இந்த போட்டி யின் பொழுது பெவிலியனில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை படம் பிடித்து, மைதானத்தில் இருந்த டிஜிட்டல் ஸ்க்ரீனில் ஒளிபரப்பியது ஒளிபரப்பு நிறுவனம். இதனை கண்டு காதல் ஜோடி கள் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை படம்பிடித்த ஒளி பரப்பு நிறுவனத்திற்கு சமூகவலைத்தளங் களில் கண்டனம் குவிந்து வருகிறது.
ஒளிபரப்பியது யார்?
ஆஸ்திரேலியா - பாகிஸ் தான் நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய நாட்டில் சேனல் 7 (Channel 7), போக்ஸ்டெல் (Foxtel), கையோ ஸ்போர்ட்ஸ் (Kayo Sports) ஆகிய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த 3 நிறுவ னங்களில் “சேனல் 7” நிறுவனம் முதன் மையான ஒளிபரப்பாளராக இருக்கும் சூழ்நிலையில், அந்த நிறுவனம்தான் காதலர்களை படம்பிடித்து தனிமனித உரிமையில் தலையிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் நாட்டின் செயலை விட இது மோசமானது
22-ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து கடந்த 2022இல் கத்தார் நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் “இஸ்லாமிய மண்” மற்றும் எங்களுக்கு தனி இறையாண்மை இருப்பதாக கூறி மைதானங்களில் ஆடைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு என்று கூறி பெண்களை நவீன தொலைநோக்கி வசதி கொண்ட “ஜூம் கேமரா” மூலம் நோட்டமிட்டது கத்தார் அரசு. மேலும் திருமணம் ஆகாமல் மைதானத்தில் நுழையக் கூடாது என காதல் ஜோடிகளுக்கு அனுமதி யும் மறுக்கப்பட்டது. கத்தார் அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பின ரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கண்டனங்களை கண்டுகொள்ளாமல் தொடர் முழுவதும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கத்தார் நாடு கூட ஒரே ஒரு தொட ரில்தான் தனி மனிதர்களின் உரிமைகளை மீறியது என்ற நிலையில், மெல்போர்ன் மைதான நிகழ்வுகள் போன்று நாள்தோறும் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுக ளில் அரங்கேறுகிறது. இதற்கு மனித உரிமை உள்ளிட்ட அமைப்புகள் இதுவரை வலுவான கண்டனங்கள் தெரிவிக்காததால் சீரியல் தொடர் போல தொடர்ந்து அரங் கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.