புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
3 டி-20, ஒரு டெஸ்ட் என இரண்டு விதமான போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வியாழனன்று தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்த நிலை யில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களுக்கு சுருண்டது. 292 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து, வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு 479 ரன்கள் நிர்ணயம் செய்தது. தீப்தி சர்மா (4), பூஜா (3) ஆகியோரின் அசத்தலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 131 ரன் களில் சுருண்டது. இதன்மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகளிர் டெஸ்ட் உலகில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய தீப்தி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்குமுன் கடந்த 1998இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி யில் இலங்கை மகளிர் அணி பாகிஸ்தான் அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிகப்பட்ச ரன் வித்தி யாச வெற்றியாக இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் : ரோஹித் நீக்கம் எதிரொலி
மும்பை அணியின் டுவிட்டரில் இருந்து 4 லட்சம் ரசிகர்கள் வெளியேறினார்கள்
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள் ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொட ரில் 5 முறை சாம்பியன் பட்டமும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்ற அணியான மும்பை இந்தி யன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். 10 வருடம் அணியை நல்லமுறையில் கட்டுக்கோப்பாக வழிநடத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப் டன் பதவியில் இருந்து துரத்தப்பட்டார். இந்நிலையில், ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ள மும்பை இந்தியன்ஸ் ரசி கர்கள் மும்பை இந்தியன்ஸ் கொடியை ரசிகர்கள் தீயிட்டு கொளுத்திய நிலை யில், சமூகவலைத்தளங்களில் மும்பை இந்தியன்ஸின் அதிகாரப்பூர்வ கணக்கு களில் இருந்து வெளியேறி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அன்பாலோ செய்துள்ளனர். அதே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கத்திலும் இருந்து லட்சக் கணக்கான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேறி யுள்ளனர். இன்ஸ்டாகிராமில் சென்னை முதலிடம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் அன்பாலோ செயலால் இன்ஸ்டாகிரா மில் 13 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள் ளது. மும்பை அணி 12.9 பாலோவர்ஸ் களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப் பட்டது. டுவிட்டரில் சென்னை அணி வழக்கம் போல முதலிடத்திலேயே நீடிக் கிறது. சென்னை அணிக்கு டுவிட்டரில் 10.1 மில்லியன் பாலோவர்ஸ்கள் உள்ள னர். மும்பை அணிக்கு 8.2 மில்லியன் பாலோவர்ஸ்கள் மட்டுமே உள்ளனர். ரோஹித் நீக்கத்திற்கு முன்னால் மும்பை அணிக்கு 8.6 மில்லியன் பாலோ வர்ஸ்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி 2023
இன்றைய ஆட்டங்கள்
பாட்னா - ஜெய்ப்பூர்
(27-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
யு மும்பா - தமிழ் தலைவாஸ்
(22-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி