பாரீஸ்
பிஎஸ்ஜியை விட்டு வெளியேறுகிறார் மாப்பே
ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்
கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தேசிய கால்பந்து அணியின் கேப்டனுமான கிலியான் மாப்பே (25), பிஎஸ்ஜி (பாரீஸ் செயின்ட் ஜெர்மைன்) என்ற கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பிரான்ஸ் நாட்டின் கிளப் தொடரான “லீக் 1” என்ற தொடரில் அங்கம் வகிக்கும் பிஎஸ்ஜி அணியை விட்டு மாப்பே வெளியேற உள்ளதாக 2 நாட்கள் முன்பு தகவல் வெளியாகியுள்ளது.
இது புரளி என தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையில், சனி யன்று கடந்த 7 ஆண்டுகளாக விளையாடி வரும் பிஎஸ்ஜியை விட்டு வெளியேறுவதை மாப்பேவே உறுதி செய்து காணொளி வெளியிட்டார். அந்த காணொளியில், “பிஎஸ்ஜியை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமானது தான். இது என் வாழ்நாள் முழுவதும், என் மனதில் இடம் பிடித்து இருக்கும் ஒரு கிளப் அணி பிஎஸ்ஜி மட்டுமே. பிஎஸ்ஜி ரசிகர்கள் என்றென்றும் என் இதயத்தில் இருப்பார்கள்” எனக் கூறினார். இதன்மூலம் பிஎஸ்ஜியை விட்டு மாப்பே வெளி யேறுவது உறுதியான நிலையில், அடுத்ததாக அவர் எந்த கிளப் அணியில் இடம்பிடிப்பார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
ரியல் மாட்ரிட்?
பிஎஸ்ஜியை விட்டு வெளியேறும் மாப்பே ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக தடம் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் இன்னும் உறுதி செய்ய வில்லை என்றாலும், ரூ.2,506 கோடிக்கு (300 மில்லியன் டாலர்) மாப்பேவை வாங்க ரியல் மாட்ரிட் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு மாப்பே செல்லவுள்ளது 60% உறுதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
வெளிநாட்டு வீரர்கள் அனை வரும் ஐபிஎல் தொடரே கதி என்று இந்தியாவில் முடங்கி இருக் கிறார்கள். ஆனால் கிரிக்கெட் உல கின் மிக முக்கிய சர்வதேச அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் வீரர்கள் (எல்லை சண்டை பிரச்சனையால் மோடி அரசு அனுமதி வழங்கவில்லை) ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. பாகிஸ் தான் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற் காதது அந்த அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காரணம் சர்வதேச அளவில் மிரட்டும் முக்கிய நட்சத்திர வீரர்கள் அனைவரும் நடப்பு சீசன் ஐபிஎல் தொட ரில், அதுவும் ஆடும் லெவனில் கள மிறங்கி விளையாடி வருகின்றனர். இத னால் அவர்களுடைய ஆட்ட திறனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நன்கு அறிந்தும், அவர்களது ஆட்டத்திற னை ஆய்வு செய்தும் வருகின்றனர். அதா வது இவர் இனி இப்படி தான் விளையாடு வார் என்றும், வெளிநாட்டு வீரர்களுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இது இந்தியா விற்கு மட்டுமின்றி ஐபிஎல் விளையா டும் மற்ற சர்வதேச வீரர்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தும்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருவ தாலும், அவர்களின் சமீபகால ஆட்டத் திறன் மறைமுகமாக இருப்பதால் வர விருக்கும் டி-20 உலகக்கோப்பை தொட ரில் அந்த அணிக்கு கூடுதல் சாத கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்
குஜராத் - கொல்கத்தா
(63ஆவது ஆட்டம்)
வெளியேறிய அணிகள் : மும்பை, பஞ்சாப்
வெளியேறும் நிலையில் உள்ள அணிகள் : பெங்களூரு, குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)