games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

பாரீஸ், பிரான்ஸ் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான
ஒலிம்பிக் தொடரின்  33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

பதக்கப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளிய பாகிஸ்தான்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 64ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் ஒரே ஒரு தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் அணி 53ஆவது இடத்திற்கு முன்னேறி இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மீண்டும் தழைத்தது இந்தியா - பாகிஸ்தான் சகோதரத்துவம் “நதீமும் என் மகன் தான்” ; நீரஜ் சோப்ரா தாயார் நெகிழ்ச்சி

நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது,”நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அந்த வீரரும் (அஷ்ரத் நதீம்)  எனது மகன்தான். அங்கு செல்லும்  அனைவரும் கடினமாக உழைக்கிறார் கள். நீரஜ் சோப்ரா வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு விருப்பமான உணவை நான் சமைத்து கொடுப்பேன்” எனக்கூறினார்.

நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவியின் இந்த கருத்து சமூகவலைத் தளங்களில் டாப் டிரெண்ட்டிங்கில் வைர லாகி வரும் நிலையில், இந்திய ரசிகர் கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீம் எங்க ளது சகோதரர் எனக் கூறி வாழ்த்துக் களுடன் மீம்ஸ் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

“அன்று ஈட்டி வாங்க காசு இல்லை” வறுமையை வென்ற கட்டிடத் தொழிலாளி மகன்

பாரீஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அஷ்ரத் நதீம் பாகிஸ் தான் நாட்டின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர். கட்டிடத் தொழிலாளி மக னான இவர் தனது தந்தை முகமது அஷ்ரப்பின் சொற்ப வருமானத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் பயிற்சி பெற்றார். கடன் மற்றும் இதர சேமிப்பு பணத்தின் மூலம் 2015இல் அவரது தந்தை ஈட்டி வாங்கி கொடுத்தார். இந்த ஒரே ஈட்டியைத்தான் கடந்த 9 ஆண்டுகளாக பயிற்சி மற்றும் சர்வதேசப் போட்டிக்கு பயன்படுத்தினார் அஷ்ரத் நதீம். 

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன் னர் அந்த ஈட்டி மிக மோசமான அள வில் உருக்குலைந்த நிலையில், அஷ்ரத்  நதீம் தேசிய விளையாட்டு ஆணையத் திடம், “பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங் ங்கேற்க எனக்கு ஒரு ஈட்டி வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். நிதி நெருக் கடியால் சிக்கிய தேசிய விளையாட்டு ஆணையம் சிறிது காலதாமதம் செய்த நிலையில், இந்திய அரசைப் போல பாகிஸ்தான் அரசும் அஷ்ரத்துக்கு உதவ வேண்டும் என நீரஜ் சோப்ரா உட்பட பலர் கோரிக்கை விடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அஷ்ரத் நதீமுக்கு ஸ்பான் சராக இருக்க சம்மதம் தெரிவித்து, ரூ.86,000 மதிப்புள்ள ஈட்டியை வாங்கிக் கொடுத்து மற்ற செலவுகளையும் கவ னித்துக் கொண்டது. இந்த உதவியின் மூலமும், வறு மையை சமாளித்து எதிர்கொண்ட போராட்ட த்தின் மூலமும் அஷ்ரத் நதீம் ஒலிம் பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வர லாறு படைத்தார். 

சாதனை

பாகிஸ்தான் நாடு 1960, 1968, 1984 ஆகிய 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்றது. இந்த 3 தங்கப்பதக்கமும் ஹாக்கியில் மட்டுமே கிடைத்த நிலை யில், தனிநபராக 40 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம் வென்று பாகிஸ் தான் நாட்டிற்கு பெருமை சேர்த்துள் ளார் நதீம்.

மாதவிடாய் நாளிலும் நாட்டுக்காக போராடிய மீராபாய் சானு

இந்தியாவின் நட்சத்திர பளு தூக்குதல் வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக் போல பாரீஸ் ஒலிம்பிக்கிலும்   பதக்கம் வெல்வார் என  எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு தான் களமிறங்கிய 48 கிலோ பிரிவில் 4ஆம் இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். மீராபாய் சானு பதக்கம் பெறாதது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவர் செய்த சம்பவம்  பாராட்டுகளை குவித்து வருகிறது.  அது யாதெனில் மாதவிடாய் நாளில் மீராபாய் சானு உடல் வலியையும் பொருட் படுத்தாமல் நாட்டுக்காக 199 கிலோ வரை பளு தூக்கி வெற்றிக்காக போராடி யுள்ளார். மீராபாய் சானுவின் உள்ள  உறுதி அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளநிலையில், அவருக்கு நாடு முழுவதும் விளையாட்டு ரசிகர்கள், நெட்டிசன்கள்  என அனைத்து தரப்பினரும் பாராட்டு  தெரிவித்தனர். இதுதொடர்பாக மீரா பாய் சானு கூறுகையில், “நாட்டுக்காக  நான் கடுமையாக போராடினேன். ஆனால் எனது உடல்நலக்குறைவு  எனது ஆட்டத்திறனை சற்று பாதித்தது.  காரணம் நான்போட்டியில் கலந்து  கொண்ட  நாளன்று மாதவிடாயின் மூன் றாவது நாளில் இருந்தேன். இது எனது  உடல்நிலையை பலவீனமாக்கியது. இருந்தாலும் பாரீஸ் ஒலிம்பிக்கில் எனது  செயல்திறன் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் கூறினார். 

மாதவிடாய் நாட்களில் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டுக்காக 199 கிலோ  தூக்கி பதக்கத்திற்காக போராடிய  மீரா பாய் சானுவின் செயல்பாடு நெகிழ்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.