games

img

விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாள ரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக (ஏசிசி) தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஜெய் ஷா அடுத்த ஒரு  வருடம் ஏசிசி தலைவராக இருப்பார்  என ஏசிசி வருடாந்திர பொதுக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜெய் ஷா 2021 முதல்  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவ ராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கும் போட்டியாம்

கிரிக்கெட் துறைக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத ஜெய் ஷா  தனது தந்தை அமித் ஷா மற்றும் தந்தை யின் நண்பரான பிரதமர் மோடியின் ஆதரவுடன் இந்திய கிரிக்கெட் உலகை தனது உள்ளங்கையில் ஆட்டிப் படைத்து வருகிறார். கிட்டத்தட்ட பிசிசிஐ-யை வைத்து கல்லா கட்டுவது, பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்கு ஏற்றார் போல் இந்திய கிரிக்கெட் உலகை நகர்த்துவது என சித்து விளையாட்டை அரங்கேற்றி வரும் ஜெய் ஷா, இடையில் இலங்கை கிரிக்கெட் உலகிற்கு சர்வதேச தடையையும் வாங்கி கொடுத்தார்.

கிரிக்கெட் உலகின் சர்ச்சை மன்ன ராக உள்ள ஜெய் ஷா அடுத்ததாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலை வர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐசிசி தலைவராக உள்ள சஷாங் மனோகரின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ள  நிலையில், நவம்பர் மாதமே அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பிசிசிஐ, ஏசிசி கவுன்சில் பதவிகளை ஜெய் ஷா ராஜி னாமா செய்துவிட்டு ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரோ கபடி 2024 : இன்று விடுமுறை
புரோ கபடி தொடரின் 9-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த 9-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. தொடர்ந்து 10-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தில்லியில் வெள்ளியன்று தொடங்கும் நிலையில், பாட்னாவில் இருந்து தில்லிக்கு புரோ கபடி இடம்பெயர்வதால் வியாழனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல வெள்ளியன்று அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் விதிமுறைகள் இருந்தும் அதிகரிக்கும் தலைக்காயங்கள்

கபடி விளையாட்டில் பொதுவாக கை, கால், இடுப்பு, தோள்பட்டை ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்படும். சில நேரங்களில் மூக்கு, வாய்  உடைப்பு காயங்கள் ஏற்படும். கிராமப்புறங்களில் போதுமான விதி முறை கடைபிடிப்பு இல்லாத காரணங் களால் வீரர்கள் உயிரிழக்கும் சம்பவ ங்களும் அரங்கேறும். மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் மண் தரையில் நடத்தப்படும் கபடி விளையாட்டுக்கானது தவிர, புரோ கபடி தொடருக்கானது கிடையாது. 

காரணம் புரோ கபடி தொடரில் பஞ்சு போல ரப்பர் ஆடு களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் கீழே விழு வதால் பெரியளவில் வீரர்களுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்படுவது கிடையாது. அதே போல டி-சர்ட்டை பிடித்து இழுப்பது தவறானது என விதிமுறை உள்ளதால், வீரர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் புரோ கபடி தொடரில் மிக குறைவு. 

ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில் பெங்கால் கேப்டன் மணீந்தர் சிங் உட்பட 6-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு தலைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. கபடி விளையாட்டு வரலாற்றிலேயே பாது காப்பான முன்னுதாரணமான தொடராக புரோ கபடியை விளை யாட்டு உலகம் போற்றி வரும் நிலையில், தலைக்காயங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு இதுவரை புரோ கபடி நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.  கை, கால்களில் ஏற்படும் காயங்களை விட தலையில் ஏற்படும் காயம் ஆபத்தானது. காரணம் பின்வரும் காலங்களில் தாமதமாக ஆபத்தான பக்கவிளைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.