ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நட்சத்திர வீரர்கள் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது பயிற்சியாளராக பொறுப்பேற்ற லாங்கர், அணியை மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக மாற்றினார். அதே சமயம் அவரது கண்டிப்பான அணுகுமுறைகள் குறித்து வீரர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம், ஆஷஸ் தொடரில் 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அடுத்ததாக அந்த அணி வரும் மார்ச் முதல் ஏப்ரல் வரையில் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் ஜஸ்டின் லாங்கர் பதவி விலகியிருக்கிறார்.