games

img

இந்திய அணி மீண்டும் திணறல்

3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி திங்களன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கடினமான இலக்கை (208 ரன்கள்) சாதாரணமாக சேசிங் செய்து அசத்தியது ஆஸ்திரேலிய அணி. ஆசியக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வி ஏற்கெனவே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியதன் மூலம் பார்ம் பிரச்சனையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய தவறுகளால் படுதோல்வியை சந்தித்து கூடுதல் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது இந்திய அணி.

தோல்விக்கான காரணங்கள்

1. பலமான ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் பொழுது அனுபவமிக்க பந்துவீச்சாளர்களான பும்ரா, தீபக் சாஹர், அஸ்வின் ஆகியோரை பெஞ்சில் அமர வைத்தது.
2. பேட்டிங் சாதகமான பிட்சில் ரன்களை வாரி வழங்கும் உமேஷ், ஹர்ஷல் படேலை களமிறக்கியது.
3. டெத் ஸ்பின்னரான சஹாலை தொடக்கத்திலேயே பயன்படுத்தாதது.
4. புவனேஸ்வர், ஹர்ஷல் படேலின் பந்துவீச்சை தொடர்ந்து புரட்டியெடுத்த பின்பும் தொடர்ந்து பந்துவீச வைத்தது.
5. ஆஸ்திரேலிய வீரர் வாடே ஒரு அபாயகரமான பேட்டர் என தெரிந்தும் அவருக்கு வியூகம் எதுவும் வகுக்காமல் ரோஹித் சொதப்பியது. (வாடேவின் அதிரடியால்தான் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது).
6. ஆசியக்கோப்பை போலவே கேப்டன்ஷிப்பில் ரோஹித் மந்தமாக செயல்பட்டதால் வீரர்களும் பந்துவீச்சின் பொழுது சோம்பலாக இருந்தனர்.
7. கடந்த கால நிகழ்வுகளை தற்காலத்திலும் எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியா அணியை குறைவாக எடைபோட்டு அசாதாரணமாக விளையாடியது.
8. 200 ரன்களுக்கு மேல் குவித்ததால் ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்டோம் என்ற செருக்குடன் 2-வது இன்னிங்சில் விளையாடியது.
9. இந்திய அணியை எடைபோடாமல் பலமான அணியாக நினைத்து முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி கவனமாக விளையாடியது.
10. டி-20 போட்டியில் (ஐபிஎல்) கேப்டன் அனுபவம் கொண்ட கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் ஆலோசனைகளைப் பெறாமல், அணியுடன் ஆலோசனையில் இணையாமல் ஏதோ வாகனத்தை ஓட்டுநர் மட்டுமே ஓட்டுவது போல ரோஹித் சர்மா தனியாக செயல்படுவது போன்றவற்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் பலத்த அடி வாங்கியுள்ளது.