கிளப் உலகக்கோப்பை கால்பந்து மான்செஸ்டர் சிட்டி கோல் மழை
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொ டரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெ றும் இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 கிளப் அணிகள் பங்கேற்றுள் ளன. தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலை யில், இந்திய நேரப்படி திங்களன்று அதி காலை நடைபெற்ற “குரூப் ஜி” பிரிவின் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) - அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 8ஆவது நிமிடம் முதல் மான் செஸ்டர் சிட்டி கோல்மழை பொழிந்தது. ஆட்டநேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி, அல் அய்ன் அணியை புரட்டியெடுத்தது. “குரூப் எச்” பிரிவு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) - பச்சுவா (மெக்சிகோ) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. டிரா “குரூப் எச்” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரிய கிளப் அணியான சால்ஸ்பர்க், சவூதி கிளப் அணியான அல் ஹிலால் அணியுடன் மோதின. இந்த ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது.
டி-20 உலகக்கோப்பையில் கனடா
0ஆவது சீசன் டி-20 உல கக்கோப்பை இந்தியா, இலங் கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொ டருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உல கம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்காவின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய கனடா அணி டி-20 உல கக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள் ளது. இதுவரை 13 அணிகள் தகுதி பெற்ற நிலையில், 8 அணிகளை தேர்வு செய்ய தொடர்ந்து தகுதிச்சுற்று போட்டி கள் நடைபெற்று வருகிறது.
டிக்கெட் எவ்வளவு?
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் திருநெல் வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த டிஎன்பிஎல் தொடருக்கான டிக்கெட் வெறும் ரூ.300 தான். கேலரிகள் பல இருந்தாலும் ஒரே விலையுடன் தான் டிக்கெட் விற்பனை நடைபெற்று வரு கிறது. https://www.district.in/events/shriram-capital-tnpl-2025 என்ற லிங்க் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம்.
என்னை விடுவித்து விடுங்கள் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் பிரித்வி ஷா கோரிக்கை
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷா தனது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் திற்காக மும்பை அணியிலிருந்து விலகி வேறு உள்நாட்டு அணியுடன் இணைய எம்சிஏ-விடம் (மும்பை கிரிக்கெட் அசோசி யேஷன்) என்ஓசி (No Objection Certificate) கோரி விண்ணப்பித்துள்ளார். சிவப்புப் பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து நீண்ட காலமாக ஒதுங்கி யுள்ள பிரித்வி ஷா, வெள்ளைப் பந்து (ஒருநாள், டி-20) போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதே போல போட்டி இல்லாத காலங்களில் மைதானத் திற்கு வெளியே ஒழுக்கமில்லா சம்பவங்களில் அதிகமாக சிக்குகிறார். தற்போதைய சூழ்நிலையில் பிரித்வி ஷா மீது ஆட்டத்தை விட ஒழுக்க மில்லா சம்பவங்களின் விமர்சனங்களே மிக அதிகமாக உள்ளன. இதனால் மும்பை அணி நிர்வாகம் பலமுறை பிரித்வி ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அவர் தனது நடவடிக்கையில் மாற்றத்தை வெளிப்படுத்த வில்லை. இதனால் மும்பை அணி நிர்வாகம் பிரித்வி ஷாவை கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே பிரித்வி ஷா மும்பை அணியை விட்டு வேறு மாநில அணிக்கு செல்ல தயாராகி வருகிறார்.