உலகின் முதல் 10 பணக்கார அணிகள் அமெரிக்கா வசம்
விளையாட்டை வணிக தளமாக மாற்றும் அமெரிக்கா
விளையாட்டு உலகில் ஒவ்வொரு நாட்டின் தேசிய அணிகளை விட சாதாரண உள்ளூர் கிளப் அணிகள் அதிக சொத்து வைத்துள்ளன. இதற்கு காரணம் விளையாட்டை வணிக தளமாக மாற்றி ஒரு பங்குச்சந்தை வர்த்தகம் போல செயல்படுத்துவதுதான். இந்த வகையான விளையாட்டு வணிக திட்டத்தை கொண்டு வந்தது அமெரிக் காவும், ஐரோப்பிய நாடுகளும்தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் கிளப் கால்பந்தில் மட்டும்தான் விளையாட்டு வணிகத்தை கையாண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா எந்தவொரு விளை யாட்டையும் விட்டுவைப்பதில்லை. அனைத்து விளையாட்டிலும் வணிக முறை கொள்கை இருப்பதால் போர்ப்ஸ் உலகின் பணக்கார விளையாட்டு அணி கள் பட்டியலில் அமெரிக்க அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முத லிடத்தில் அமெரிக்க ரக்பி கிளப் அணி யான டல்லாஸ் கவ்பாய்ஸ் (ரூ.66,454 கோடி) உள்ளது. முதல் 12 இடங்களில் அமெரிக்காவின் ரக்பி, பேஸ்பால், கூடைப்பந்து அணிகள் உள்ளன. முதல் 50 அணிகளில் 42 அணிகள் அமெரிக்காவிற்கு சொந்தமானது ஆகும். 8 இடங்களில் ஐரோப்பா அணி கள் உள்ளது. 13-வது இடத்தில் ஸ்பெ யின் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் (ரூ.41,738 கோடி) உள்ளது. இந்த பட்டியலில் ஆசிய அணிகள் இல்லை. சொல்லப்போனால் விளை யாட்டு உலகின் முக்கிய விளையாட்டுக ளில் ஒன்றான கிரிக்கெட் கூட பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐபிஎல் மூலம் ஆரம்பம்
இந்தியாவில் தற்பொழுதுதான் ஐபிஎல் விளையாட்டு மூலம் விளையாட்டு வணிக முறை உருவெடுத்துள்ளது. ஐபிஎல்-லை தொடர்ந்து ஐஎஸ்எல் (கால்பந்து), புரோ கபடி ஆகிய பிரிவுகளிலும் விளையாட்டு வணிக முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பணக்கார விளையாட்டு அணியாக ஐபிஎல்-லின் மும்பை இந்தியன்ஸ் (ரூ.10 ஆயிரம் கோடி) அணி உள்ளது.
ஐபிஎல் - 2023
சியர் லீடர்ஸுக்கு இவ்வளவு சம்பளமா?
மேற்கத்திய நாடுகளில் விளையாட்டுப் போட்டியை உற்சாகப்படுத்த சியர் லீடர்ஸ் என அழைக்கப்படும் நடன அழகிகள் ஒவ்வொரு ஆட்ட நிகழ்விற்கு ஏற்ப மைதானத் தில் நடனமாடி வீரர் - ரசிகர்களை உற்சாகப்படு த்துவார்கள். இந்த சியர் லீடர்ஸ் முறையை கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் அப்போதைய உரிமை யாளரும், கடன் வாங்கி செலுத்த முடியாமல் நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா தனது அணிக்காக அமெரிக்க சியர் லீடர்ஸ் அணி யான “வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ்” அணியை களமிறக்கினார். தொடர்ந்து ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் சியர் லீடர்ஸை களமிறக்கியது. சம்பளம் ஒரு அணியில் 4 சியர் லீடர்ஸ்கள் கள மிறங்குவார்கள். பவுண்டரி எல்லையில் அமைக் கப்பட்ட ஒரு மேடையில் நின்று தங்களது அணி சிக்ஸர், பவுண்டரி அல்லது விக்கெட் வீழ்த்தி னால் இசைக்கேற்ப நடனமாடுவார்கள். இது தான் இவர்களது வேலை. சியர் லீடர்ஸ் 16-வது சீசன் கணக்கின்படி ஒரு போட்டிக்கு ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை ஊதியம் பெறுகிறார் கள். செயல்திறன் சிறப்பாக இருந்தால் மற்றும் அவர்களின் அணி போட்டியில் வெற்றி பெற்றால் போனசும் வழங்கப்படுகிறது.
சென்னையில் ஐபிஎல்
இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம் பரம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு ஆட்டம் (சென்னை - லக்னோ) நிறைவு பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் (சென்னை - ராஜஸ்தான்) வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது. ரூ. 2,000, ரூ. 2,500 விலைக்கான டிக்கெட்டுகள் மத்த கவுண்டர்களிலும், பே டிஎம் (PAYTM) மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ. 3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது.
இன்றைய ஆட்டங்கள்
குஜராத் - கொல்கத்தா
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : அகமதாபாத், குஜராத்
ஹைதராபாத்- குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)