facebook-round

img

பகத்சிங்கின் வாரிசுகளுக்கும், மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கரின் வாரிசுகளுக்கும் இடையேயான போர்

அதையும் தான் படிச்சிருவோம்..!!

1914 இல் அந்தமான் சிறையைப் பார்வையிட வந்த பிரிட்டிஷ் பிரதிநிதி

சர் ரெஜினால்ட் கிராடக் என்பவரது ஒப்புதலோடு பிரிட்டிஷ் அரசுக்கு

சாவர்க்கர் எழுதிய கடிதம் இது:

‘‘கருணை காட்டும் பேருள்ளம் கொண்ட அரசு என்னை விடுதலை செய்யுமானால் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். தவறிழைத்த ஒரு மகன் பெற்றோரைப் போன்ற பேரன்பு கொண்ட அரசாங்கத்திடம் முறையிடாமல் வேறு எங்கு முறையிட முடியும்..?’’

1923 இல் எரவாடா சிறையில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு அவர் அனுப்பி வைத்த கடிதம் இது:

‘‘எனது விடுதலைக்குப் பிறகு அரசு நிர்ணயிக்கும் காலம் வரையில் நான் அரசியலில் பங்கேற்கப் போவதில்லை. மேலும் எனது அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிப்பது உள்ளிட்ட நீங்கள் விதிக்கும் நிபந்தனைகள் முழுவதற்கும் கட்டுப்படுகிறேன்’’.

-தொடர்ச்சியாக எழுதிய மன்னிப்புக் கடிதங்களின் அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 1924 இல் அன்றைய பம்பாய் ஆளுநராக இருந்த சர் ஜார்ஜ் லாய்ட் அவர்களிடம் அளிக்கப்பட்ட தன் மீதான வழக்குகள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை குறித்து சாவர்க்கர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் இது:

‘‘எனது வழக்கு விசாரணை நியாயமாக நடந்தது என்றும், எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை உரிய அளவில் (?) இருந்தது என்றும் ஒப்புக் கொள்கிறேன். மேலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் அனைத்தும் வெற்றி பெற உழைக்க விரும்புகிறேன் எனவும் உறுதி அளிக்கிறேன்."

24 வயதில் தாய்நாட்டின் விடுதலைக்காக தூக்கு மேடையேறிய மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளுக்கும், விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்று பலமுறை மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கரின் வாரிசுகளுக்கும் இடையேயான போர் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

சாவர்க்கரின் வாரிசுகள் அதிதீவிர வலதுசாரி தேசியவாதம் பேசிக்கொண்டே நாட்டைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பகத்சிங்கின் வாரிசுகள் பெற்ற விடுதலையைப் பேணிப் பாதுகாக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதால் தேச விரோதிகளாகவும், விடுதலைப் போராட்டத்தில் துரோகம் செய்தவர்கள் இன்று தியாகிகளாகவும் நாமகரணம் சூட்டப்படும் விந்தை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

-ஆர். பத்ரி

;