districts

img

டோகா நாட்டுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், அக்.13- விஐடி பல்கலைக் கழகம் மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறு வங்களின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  விஐடி, டோகோ நாட்டின் அரசு கல்வி நிறு வனங்களின் ஆசிரியர்க ளுக்கு முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் (பி.எச்.டி) மேற்கொள்ள இந்த புரிந்து ணர்வு ஒப்பந்தம் வழி வகை செய்யும். மேலும் வி.ஐ.டி. மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் டோகோ நாட்டின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சர் பேராசிரியர் அய்ஹோ வட்டேபா மற்றும் விஐடி வேந்தர் விசுவநாதன் கையெழுத்திட்டனர். நிகர்ச்சியில் இந்தியாவிற் கான டோகோ நாட்டின் தூதரக அதிகாரி யாவோ இடம் ஆக்பே மாடோ , வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசு வநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன், பதிவாளர் டி. ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

;