districts

ஆம்னி பேருந்து  கவிழ்ந்து  5 பேர் காயம்

அறந்தாங்கி,  அக்.7 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆம்னி பேருந்து  கவிழ்ந்ததில் 4 பேர் காய மடைந்தனர். தொண்டியி லிருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்தில் ஓட்டு நர் மற்றும் நான்கு பய ணிகள் இருந்தனர். இந்த பயணிகள் 4 பேரும் மீமி சலில் ஏறியுள்ளனர். இப் பேருந்து கட்டுப்பாட்டை  இழந்து ஜெகதாப்பட்டி னம் அருகே உள்ள முத்த னேந்தல் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் பயணம் செய்த அருள்பிரீத்தி (26), ஜேம்ஸ் பாலன் (30), நஜிபு நிஷா (50), அகமது  (10) ஆகிய 4 பயணி களும், திருத்துறைப்பூ ண்டியைச் சேர்ந்த ஓட்டு நர் விஜயகுமார் (39) ஆகி யோரும் காயமடைந்த னர். இதுகுறித்து ஜெக தாப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.