districts

img

ஆய்வு செய்த ஆட்சியரை அசரவைத்த அரசு பள்ளி குழந்தைகள்

திருவள்ளூர்,மார்ச் 30 - மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளி யில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டப்படும் புதிய பள்ளி கட்டி டம் மற்றும் கதா தொண்டு நிறு வனம் மூலம் இயங்கி வரும் கதா மேஜிக் லேப் எனப்படும் சிறப்பு வகுப்பறையையும் அதில் பயிலும் பழங்குடி கிராம குழந்தைகளையும் பார்வையிட்டார். அங்கு குழந்தைகளின் கல்வி நிலை குறித்து குழந்தை களிடம் கலந்துரையாடினார். அப்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில் மூன்று குழந்தைகள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஒரே மூச்சில்ஆட்சியர் முன்பு பாடி அசத்தினர். இதையடுத்து ஆட்சியர் மீண்டும் அக்குழந்தைகளை பாடச் சொல்லி தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். மேலும்  அந்த குழந்தைகளை பாராட்டும் வகையில் பரிசு பொருட்களையும் வழங்கி னார். இச்சம்பவம் அங்கு இருந்த ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியருடன் வருகை தந்த அரசு துறை அதிகாரிகளையும் நெகிழச் செய்தது.

;