districts

img

சி.அ.செல்வம் படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம்

திருவண்ணாமலை,நவ. 30- தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டச் செய லாளரும், சிபிஎம் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினருமான சி.அ.செல்வம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி காலமானார். இந்நிலையில் சி.அ.செல்வம் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் (நவ.29) செவ்வாய் அன்று போளூர் அடுத்த கேளூர் சந்தை மேடு பகுதியில் வட்டக் குழு செயலாளர் இரா.ரவிதாசன் தலைமையில் நடைபெற்றது. மாற்று திறனாளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி சி.அ.செல்வம் படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலி செலுத்தினார். சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர். இரா.பத்ரி, மாவட்டச் செயலாளர் மா.சிவக்குமார், மாவட்ட செயற்குழ உறுப்பினர்கள் மு.வீரபத்திரன், ப.செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கே.வெச்கடேசன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர். மு.அஞ்சலி ஆகியோரும்  பேசினர்.

;