districts

img

காங்கயம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1 லட்சம் பறிமுதல்

திருப்பூர், மார்ச். 22-

காங்கயம் அருகே ஞாயிறன்று முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி  எடுத்துச் செல்லப்பட்ட  ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறி முதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதி யில், ஞாயிறன்று தேர்தல் கண்கா ணிப்புக் குழுவினர் வாகன சோதனை யில் ஈடுபட்டு வந்தனர். மதியம் 12 மணியளவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  பொ.ஜெகன்னாதன் தலை மையிலான  குழுவினர் ஆவணங்களி ன்றி கொண்டு வந்த ரூ 1 லட்சத்து 4 ஆயிரத்து200 பறிமுதல் செய்தனர். விசாரணையில்  காங்கயம் தாலுகா,  தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ப.சிவசாமி என்பவர் முறையான ஆவணங்களின்றி பணம் கொண்டு  வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்த தொகையை காங்கயம் வட்டாட்சி யர் சிவகாமி மூலம் கருவூலத்தில் ஒப் படைக்கப்பட்டது.

;