districts

img

சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டம்

சின்னாளப்பட்டி,மார்ச் 31- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி  கூட்டம் தலைவர் பிரதீபா கனகராஜ் தலை மையில் நடைபெற்றது. செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்திபாரதி ராஜா வரவேற்றார்.  கூட்டத்தில் தமிழக  பட்ஜெட் கூட்டத்தொடரில்    10-பேரூ ராட்சி பேருந்து நிலையங்களை மேம்படுத்த 25-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.அதில் சின் னாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள  காமராஜர் பேருந்து நிலையமும் நவீன முறையில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப் பட்டது. இதற்கு பரிந்துரை செய்த ஊரக வளர்ச்சி-உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் ஆகியோருக்கும். நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  கே.என்.நேரு வுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர். பேரூராட்சிக்கு எதிரே உள்ள நூலகத்திற்கு 1984-85-ம் ஆண்டு பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் நூலக கட்டிடம் போக மீதமுள்ள இடத்தை பேரூராட்சி பயன் பாட்டிற்கு திரும்ப வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றினர். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

;