districts

img

மாமல்லபுரம்-பழவேற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்,ஜன.17-  மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் இருந்து ஏராளமானோர் செவ்வா யன்று குடும்பத்துடன் சென்று கண்டு களித்தனர். இதையொட்டி மாமல்லபுரம் நகருக் குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக் கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய்  கரையோரம் என 3 இடங்களில் வாக னங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதி யில் இருந்து கடற்கரை கோயில், புலிக் குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம் பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிப் பேருந்து இயக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர்.  பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி யில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வை யிட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் நடக்கா மல் இருக்க பொன்னேரி தீயணைப்பு  மற்றும் மீட்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

;