districts

நன்னடத்தை பிணை ஆவணம் குற்றவாளிகளிடம் பெற்றது போலீஸ்

சென்னை, அக்.13-  சென்னையில் 31 குற்றவாளிகளிடம் காவல்துறை நன்னடத்தை பிணை ஆவணம்  பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை பெருநகரில், தீவிரமாக கண்காணித்து குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், பல்வேறு  குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. மேலும், சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் குற்ற வாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு தணிக்கையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 583 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு 31  குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வெகுநாட்களாக தலைமறை வாகயிருந்த 8 குற்றவாளிகளின் இருப்பிடம்  கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மேலும் சங்கிலி மற்றும் செல்போன்  பறிப்பு வழக்கு, வீடு புகுந்து திருட்டு  வழக்குகளில் சம்பந்தப்பட்ட 465 குற்றவாளி கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளதும், 41 குற்றவாளி களிடம்  நன்னடத்தை உறுதி மொழி பிணை  பத்திரம் பெற குற்ற விசாரணை முறை  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தும் குறிப்பிடத்தக்கது.  மேலும், தலைமறை வாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடித்து,  குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க காவல் குழுவினர் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

;