districts

img

தரைப்பாலம் துண்டிப்பு: 10 கிராம மக்கள் அவதி

காட்டுமன்னார்கோவில், அக். 21- வங்கக் கடலில் புதிய  புயல் சின்னம் உருவாகி யுள்ளது. இதனால் தமிழ கம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத் தில் கடந்த 4 நாட்களாக கன மழை நீடித்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே எடையார், திருமூஸ் தானம் கிராமத்தை இணைக் கும் மண்வாய்க்கால் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு அத்தியாவசிய தேவைகளுக் காகவும், பள்ளி, கல்லூரிக்கு செல்ல  மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட தண் ணீர் பாலத்தின் கீழே பெருக் கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் மண் வாய்க்கால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுமன்னார் கோவிலில் இருந்து கெற் கிருப்பு, அழிச்சமங்கலம் வழித் தடங்கள் மூலம் எடை யார் வழியாக 10 கிராமங்க ளுக்கும் போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும், பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;