districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கல்லரை பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலையை சாதிய வன்மத்துடன் இழிவுபடுத்திய, ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செங்கம் தாலுக்கா செயலாளர் எ.லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பா.செல்வன், விசிக மாவட்டச் செயலாளர் பு.செல்வம், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் என்.ஏ.கிச்சா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நிர்வாகிகள் எஸ்.ராமதாஸ், எம்.பிரகலநாதன், வி.சுப்பிரமணி, வழக்கறிஞர் எஸ்.அபிராமன், டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;