districts

img

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி

நாகப்பட்டினம், ஜூன் 12- தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி கேட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதணையொட்டி பல்வேறு தரப்பி னரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு  தங்களது பங்களிப்பை செய்து வருகின்ற னர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக செயல் படும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தனது பங்களிப்பை அளித்துள் ளார். முதலமைச்சரின் நிவராண நிதிக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தனது ஒரு மாத ஊதியமான ரூ.1,05,000 (ஒரு லட்சத்து ஐந்தாயிரம்)-ஐ மாவட்ட ஆட்சி யர் பிரவின். பி.நாயரிடம் வழங்கினார்.

;