districts

img

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை

குழித்துறை, மே 23- கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. விடிய விடிய பெய்த மழையால் சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பேச்சிப்பாறை அணையிலி ருந்து ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித் துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆற்றோரம் உள்ளபொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வா கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

;