districts

சென்னை விரைவு செய்திகள்

ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு

திருவண்ணாமலை, ஜூலை 24 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் திருவண்ணா மலை மாவட்ட மாநாடு அண்மையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் அருண்பாட்சா தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட துணை தலைவர் சோணாசலம் வர வேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் சந்துரு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் செயலாளர் அறிக்கையையும், பொரு ளாளர் ஆனந்தன் நிதி நிலை அறிக்கையையும் வைத்து பேசினர். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நீதிமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாநில துணை தலைவர் கி.இளமாறன் நிறைவு ரையாற்றினார். ராஜகோ பால் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக அ.அருண்பாட்சா, செய லாளர் சி.சுப்பிரமணியன், பொருளாளராக அ. ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


மாற்றுத்திறனாளிகள் கடலூர் வட்ட மாநாடு

கடலூர், ஜூலை 24 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கடலூர் வட்ட மாநாடு முதுநகரில் நடை பெற்றது. மாவட்ட குழு உறுப்பி னர் அரிநாராயணன் தலை மையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில செய லாளர் முனைவர் ஜானகி. ராஜா, மாவட்டச் செய லாளர் ஆளவந்தார், பொரு ளாளர் நடேசன், துணைத்தலைவர் தட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் பேசி னர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி நிரைவுரையாற்றி னார். ரவி நன்றி கூறினார். அரசு பேருந்துகளில் நடத்துனர் அவமரியாதை செய்வதை தடுக்க வேண்டும், கல்வி யில் 5 விழுக்காடு, வேலை வாய்ப்பில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவராக வெங்கடேசன், செயலாள ராக அரிநாராயணன், பொரு ளாளராக சிவகாமி ஆகி யோர் தேர்வு செய் செய்யப் பட்டனர்.


வாலிபர் சங்க விழுப்புரம் வட்ட மாநாடு

விழுப்புரம், ஜூலை 24 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்பு ரம் வட்ட 16-வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 24) கெடாரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர்  ரா.முதலிவீரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் எஸ்.பார்த்திபன், வட்டச் செயலாளர் க.தேவநாதன் உள்ளிட்டோர் பேசினர். கல்வி வளாக மரணங் கள், பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. வட்டத் தலைவராக ஆர்.முதலிவீரன், செயலாளராக கே.தேவநாதன். பொரு ளாளராக எஸ்.ஹரிதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


 

;