districts

ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி

சென்னை, மே 5-பானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிசாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-பானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. பானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப் படுகிறது. ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. ஒடிசா மக்களுடனான ஒற்றுமையையும் ஒத்து ழைப்பையும் காட்டுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;