districts

img

சிறப்பு குழந்தைகளின் அறிவுத்திறனை வெளிக்கொணர ஒருங்கிணைந்த பயிற்சிகள்

சென்னை, நவ.15- சென்னை தி.நகரில் உள்ள சிறப்பு குழந்தை களுக்கான  மதுரம் நாராய ணன் மையத்தில் அக்குழந் தைகளின் அறிவுத்திறனை வெளிக்கொணர அனைத் தையும் உள்ளடக்கிய ஒருங்  கிணைந்த பயிற்சிகள் அளிக்  கப்படுகின்றன. வெறும் பணி என்று கரு தாமல் ஆசிரியர்கள் அந்த  குழந்தைகளின் பெற்றோர் கள் உதவியுடன் அர்ப் பணிப்புடன் செயல்பட்டு இந்த பயிற்சிகளை வழங்கு கிறார்கள். இந்த மையத்தின் சார்பில் சென்னையில் சமீ பத்தில் நடைபெற்ற ஏர்  வைஸ் மார்ஷல் வி.கிருஷ்ண மூர்த்தி நினைவு சொற்பொழி வில் பேசியவர்கள் இதனை தெரிவித்தனர்.  வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரியின் குழந்தைகள் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் பீனா கோஷி பேசுகையில், ஒருங்கிணைந்த பயிற்சி முறையால் குழந்தைகளை நல்ல நிலைக்கு இந்த மையம் கொண்டு வருகிறது என்றார். குழந்தைகள் என்ன  கற்றுக்கொள்ள விரும்பு கின்றன என்பதை அறிந்து  அவர்களுக்கு போதிக்கப் படுகிறது. சில குழந்தை களுக்கு உடல் ரீதியியான பாதிப்புகள் இருந்தாலும் மன ரீதியில் அவர்கள் திற மையுடன் இருப்பார்கள். அவர்களை கண்டறிவது அவசியம் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழில் முனைவோர் டாக்டர் அருணா ரத்னம், இந்த மையம் எந்த சிறப்புக்குழந்தைகளையும் நிராகரிப்பதில்லை. அனை வரையும் ஏற்றுக்கொள்கி றது. ஒவ்வொரு குழந்தைக் கும் மருத்துவர், உடலியக்க நிபுணர், ஆசிரியர் உதவி  கிடைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும்  தொடர்ந்து கண்காணிப்படு கிறது. இந்த குழந்தை களுக்கு பயிற்சி அளிக்க  பெற்றோருக்கு ஒவ்வொறு 3 மாதமும் பயிற்சி அளிக்கப்  படுகிறது.இதற்காக மதுரை போன்ற தொலை தூர பகுதிகளில் இருந்தும் பெற் றோர் வந்து செல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சிறப்பு குழந்தைகளுக் கான மதுரம் நாராயணன் சிறப்பு மையத்தை விமானப்  படையில்  ஏர் வைஸ் மார்ஷ லாக பணியாற்றி ஓய்வுபெற்ற வி.கிருஷ்ணமூர்த்தி அவரது  மனைவி ஜெயா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தொடங்கி னர்.