court

img

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்த உத்தரவை சமர்ப்பிக்க உத்தரவு....  

மதுரை:
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்ய இயற்றப்பட்ட தமிழக அரசின் அவசரச் சட்ட நகலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுமுன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவிளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அலைபேசி, கணிப்பொறி என எதில் விளையாடினாலும் அதை சைபர் குற்றப் பிரிவினர் கண்டுபிடிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய இயற்றப்பட்ட அவசரச்சட்ட நகலைத் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.

;