சென்னை, மார்ச் 24 - ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், பாஜக மாணவர் அமைப்பான ஏவிபிவியை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர். இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டவர்களை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் துறை தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சந்தித்தார். இதையடுத்து அவரை மருத்துவக் கல்வி இயக்குநர் தற்காலிக பணி நீக்கம் செய்தார்.இதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வியாழ னன்று (மார்ச் 24) நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஏபிவிபி அரசியல் அமைப்பு அல்ல என்றார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், லாவண்யா விவகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துக் களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிந்துள்ளார். ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்புதான். தற்போது துறை ரீதியான விசாரணை நடந்து வருவ தால் அதை தொடர அனுமதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பி டாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.