முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.