court

img

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்

      கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான சொலிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: பாலியல் வன்கொடுமை நடந்து 5 ஆவது நாளில்தான் சிபிஐ விசாரணைக்குள் நுழைகிறது அதற்குள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தது, காவல்துறையின் நாள் குறிப்பில் இந்த சம்பவம் காலை 10.10 நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் குற்றச் சம்பவம் நடந்த இடம் காலை 11.30 க்குதான் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
குற்றவியல் வழக்கைக் கையாளும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொல்கத்தா காவல்துறை பின்பற்றவில்லை என இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என உச்சநீதிமன்றம் காட்டம்