தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், ஆலையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசின் உத்தரவையும், உயர்நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றாமல் ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; சாமானிய மக்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் வரை வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது; தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.