கொள்கையும் தியாகமும் கொண்ட மகத்தான வரலாறு
இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றைப் பற்றி தமிழில் மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள நூல் இதுவாகும். இந்நூலில், பேரா. அருணன் 1920 முதல் 1964 வரையிலான கால கட்டத்தில் நடைபெற்ற மகத்தான போராட்டங்களையும், இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியையும் வரலாற்று அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார். உதயமாகும் தொழிலாளி வர்க்கம்... இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் உருவான வரலாறு இந்நூலில் குறிப்பிடத்தக்கதாகும். 1853-ல் காரல் மார்க்ஸின் கேள்வி-பதில் மூலம் இந்நூல் துவங்குகிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவில் தொழில் மயமாக்கல் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிமுகப்படு த்தியதை மார்க்ஸ் கணித்திருந்தார். 1871-ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பேரவை கூட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேய அரசாங்கத்தின் கொடு மைகளுக்கு எதிரான அதிருப்தியும், வரி கொடுமையும் தொழிலாளர் களின் வறுமையும் கம்யூனிஸ்ட் இயக்கத் திற்கான வித்தாக அமைந்தன.
கருத்தியல் நிர்ணயிப்புகளும் களச் செயல்பாடுகளும்...
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பூரண விடுதலை, காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்ற வற்றைப் பற்றிய நிலைப்பாடுகளை வரலாற்று சூழலில் மதிப்பீடு செய் துள்ளது. விடுதலைக்குப் பின்னர் தெலுங்கானா போராட்டம், காங்கிரஸ் அரசு மற்றும் ஏகாதிபத்தியம் குறித்த நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆழ மாக விவாதித்து, சரியான முடிவு களை எடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சி போராட்டங்கள், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் பாதைகள் குறித்த கருத்தியல் மோதல்கள் ஆகிய வற்றின் விளைவாக சிபிஐஎம் உரு வானது. இந்தியாவிற்கான சரியான புரட்சிப் பாதையை உருவாக்குவதில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் இந்நூலில் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களும் ஆதாரங்களும்... இந்நூல் கம்யூனிஸ்ட் இயக்கங் களின் வரலாற்று ஆதாரங்கள், தலை வர்களின் வாழ்க்கை வரலாறுகள், சுதந்திரப் போராட்ட ஆவணங்கள் போன்ற நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாகவும், 93 அத்தியாயங் களாகவும் விரிவாகவும், ஆழமான முறையிலும் எழுதப்பட்ட இந்நூல், வாசகருக்கு எளிதாக புரியும் வகையில் அமைந்துள்ளது. அருண னின் எழுத்தாற்றல் இந்நூலுக்கு ஒரு தனி சிறப்பைச் சேர்க்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார வர லாற்றை ஆழமாகப் படைத்த இந்நூல், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்க ளிப்பை விளக்கும் ஒரு முக்கியமான ஆவணமாகும்