அருந்ததியர் 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டின் முழுப் பலனும் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். அருந்ததியர்க்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அருந்ததியர் அமைப்புகள் சார்பில் திண்டுக்கல்லில் வியாழனன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற வெற்றி விழா சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையின் பகுதிகள்:
பட்டியல் வகுப்பினருக்கு உள்ளேயே அருந்த தியர் போன்ற மிகவும் பின்தங்கிய பிரிவி னருக்கு ஆந்திராவில், பஞ்சாப்பில், பீகாரில் உள் இடஒதுக்கீடு வழங்கி அது மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீடு அமலாகிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் தான், உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிற நமது தோழர்கள் இரா.அதியமான், கு.ஜக்கையன், நாகை. திருவள்ளுவன், வெண்மணி, தங்கப்பாண்டியன் ஆகி யோர் இந்த வெற்றியின் பலன்களை முழுமையான அனுபவிக்க முடியுமா என்ற அச்சம் இருப்பதாக பேசியிருக்கிறார்கள். இடஒதுக்கீடு கிடைக்குமா, கிடைக்காதா என்ற நம்பிக்கையற்ற நேரத்தில் நாம் போராடி இந்த உள் இடஒதுக்கீட்டைப் பெற்றிருக்கி றோம். சட்டமாகவும் ஆக்க முடிந்திருக்கிறது.
இந்தச் சட்டத்திற்குத் தடைகள் வந்தபோது, அதைத் தகர்த்தெறிந்து இப்போது உச்ச நீதிமன்றம் இறுதியான தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு ஆபத்து என்று அச்சப்படத் தேவையில்லை.
உள் இடஒதுக்கீடு பயணத்தில் தோழர் என்.வரதராஜன்
இந்த உள் ஒதுக்கீடு கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆற்றிய மகத்தான பங்கை எல்லோரும் பேசினார்கள். இந்த போராட்டத்திற்கு ஒரு முகம் கொடுத்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்றால் அது மிகையாகாது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திண்டுக்கல் மண்ணின் மைந்தருமான தோழர் என்.வரதராஜன், தன்னுடைய வாழ்நாளில் இரண்டரை ஆண்டு காலம், அருந்ததிய மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் அவர் பயணம் செய்யாத இடமேயில்லை என்ற அளவிற்கு பிரச்சாரத்தைக் கொண்டு சென்றார். அருந்ததியர் மக்களை ஒன்று திரட்டினார். டாக்டர் கலைஞரைச் சந்தித்து, அவரும் ஏற்றுக்கொள்கிற வாதங்களை முன் வைத்து அதைச் சட்டமாக்கி நிறைவேற்றச் செய்த பெருமை தோழர் என்.வரதராஜனை சாரும். அருந்ததியர் மக்களின் வீட்டில் தோழர் என். வரதராஜன் படத்தையும் மாட்டி வையுங்கள் என்று தோழர் அதியமான் சொன்னார். இது இன்றைய தலை முறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறை, அடுத்த டுத்து வருகிற தலைமுறைக்கு நாம் பெற்றிருக்கிற உரிமை எப்படி வந்தது என்கிற வரலாற்றை போதிக்க வேண்டும் என்று சொன்னால் நமது வீடுகளில் தோழர் என். வரதராஜன் படத்தை அலங்கரித்து வைக்க வேண்டும் என்று சொன்னார். அவரோடு, பி.சம்பத் போன்ற தலைவர்களும் இந்த நெடிய போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றினார்கள்.
கௌரவ டாக்டர் பட்டம் போல
பட்டியலின மக்களுக்காக போராடுகிற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து இழிவு படுத்தினார்கள். கிழக்குத் தஞ்சையில் போராடிய போது எங்கள் கட்சியை பறையர் கட்சி என்றார்கள். பள்ளர் கட்சி என்றார்கள். இப்போது அருந்ததியர் கட்சி என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட வார்த்தை களை எங்களுக்கு வழங்குகிற டாக்டர் பட்டமாக கருதுகிறோம். தஞ்சையில் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும் சாணிப்பால், சவுக்கடி கொடுத்தபோது கம்யூனிஸ்ட் தலைவர் பி. சீனிவாசராவ் ‘அடித்தால் திருப்பி அடி’ என்று சொன் னார். ஆகையால், எத்தனையோ இடர்ப்பாடு வந்த போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் பயணத்தை நிறுத்திவிடவில்லை.
தீண்டாமை ஆணிவேரைத் தகர்ப்போம்
நமது நாட்டின் பட்டியலின மக்கள் மிக மோசமான சமூகக் கொடுமைக்கு உள்ளாகியிருக்கின்றனர். அத னால் தான் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை கள் எங்கே நடந்தாலும் அதன் ஆணி வேரை அறுக்கிற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்துகின்றன.
பட்டியலின மக்கள் ஆலயங்களில் வழிபடுகிற உரிமை இல்லை. கோவிலுக்குள் செல்ல, தெருக்க ளுக்குள்ளே செல்ல, செருப்பு போட்டு நடக்க, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க, சைக்கிளில் செல்ல உரி மையில்லை. அப்படிப்பட்ட உரிமை மீறல் நடக்கிற போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் களத்தில் இறங்கி போராடுகிற இயக்கமாக இருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தான் அந்த மக்களைத் திரட்டி போராடுகிற மகத்தான இயக்கமாக இருக்கிறது. அதைச் செய்வதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய சாதிய அமைப்பு முறை எப்படி இருக்கி றது என்பதை அண்ணல் அம்பேத்கார் மிக விளக்க மாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சாதியிலும் மட்டுமல்ல, பட்டியலின சாதியில் கூட ஏணிப்படி அடிப்படையில் தான் சாதியப் படிநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
எல்லா சாதிகளுக்கும் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 விழுக்காடு என்பதை பிரித்து மிகவும் பின்தங்கிய வர்கள் என்ற பிரிவிற்கு 20 விழுக்காடு என்று கலைஞர் கொண்டு வந்தார். அப்படிச் செய்தது நியாயமானது. அதேபோல் தான் பட்டியலின சமூகங்களில் இன்னும் அடித்தட்டில் இருக்கிற அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது மிகவும் சரியானது.
சட்டநாதன் கமிசன், ஹரி பாஸ்கர் கமிசன் என பல கமிசன்கள் இந்தக் கோட்பாட்டைத்தான் சொல்லி யிருக்கின்றன. இடஒதுக்கீட்டின் பலன்கள் எல்லா சாதிகளுக்கும் கிடைக்கவில்லை என்று ஆய்வு அறிக்கைகள் சொல்கின்றன.
மனித மலத்தை அள்ளுகிற கொடுமை
மனித மலத்தை மனிதன் அள்ளுவதைத் தடை செய்து சட்டம் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றைக்கும் மனித மலத்தை கையால் அள்ளுகிற அந்த கொடுமை முடிவுக்கு வந்துவிட்டதா? கழிவு நீர் தொட்டிகளிலே இயந்தி ரங்கள் பயன்படுத்துகிற நடைமுறை வந்துவிட்டதா? எத்தனை பேர் இன்றைக்கும் கூட அந்த தொழிலை நம்பி கழிவு நீர் தொட்டியில் மூழ்கி மரணமடைகிறார் கள்; அப்படி மரணமடைகிறவர்கள் எல்லாம் யார்? தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்கள் எல்லோரும் அருந்ததிய மக்கள் தானே!
தூய்மைப் பணியாளர் பணிக்கு நகராட்சியில் விண்ணப்பம் கோரினால் வேறு சாதியினர் மனுப் போட தயங்குகிறார்கள். அருந்ததியர்களுக்கென்றே அந்த பணி 100 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் மற்ற பிரிவினர் யாரும் ஒதுக்கீடு கேட்பது கிடையாது. நீ மலம் அள்ளுகிறவராக வாழ் நாள் முழுவதும் இருக்க வேண்டும். மலம் அள்ளுகி றவரின் பிள்ளை மருத்துவராக வேண்டாமா? என்று கு.ஜக்கையன் கேட்டார்.
தூய்மைப் பணியாளராக - கடைசி பணியாளராக உழைக்கிறாரே, அவரது மகள் ஒரு ஐ.ஏ.எஸ். ஆக, ஒரு ஐ.பி.எஸ் ஆக வர முடியாதா? என்று அதிய மான் கேட்டார். ஒரு தூய்மைப் பணியாளரின் மகன் தூய்மைப் பணியாளராக பணியாற்றினால் அவரது பிள்ளைக்கும் தூய்மைப் பணியாளர் பணி வழங்கு கிறார்கள். இதற்கு ஒன்றும் இடஒதுக்கீடு தேவை யில்லையே!
வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
இதர பிற பகுதி மக்கள் அனுபவிக்கிற சலுகைக ளை அருந்ததிய மக்களும் பெற வேண்டும் என்ப தற்குத் தான் இந்த உள் ஒதுக்கீடு. ஆகவே தான் உச்ச நீதிமன்றம், ஏற்கனவே பல உயர்நீதிமன்றங்கள் இந்த உள் இடஒதுக்கீடு தவறு என்று தீர்ப்புகள் வழங்கிய போதும்; ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்குவது தவறு என்று கூறிய போதிலும்; தமிழ்நாட்டின் உள்ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என்கிறோம்.
அதே வேளையில், தீர்ப்பில் இல்லையென்றாலும், பட்டியலின இட ஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ முறையை அமலாக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கட்சி முற்றாக நிராக ரிக்கிறது. இது, யாருக்கும் இடஒதுக்கீடு இல்லாமல் செய்து விடும்.
சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை சில பேர் விமர்சிக்கிறார் கள். சில பேர் எதிர்க்கிறார்கள். இதை மறு பரிசீல னைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட எல்லா நண்பர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து, அதற்கான தரவு களையெல்லாம் பெற்று 7 நீதிபதிகளில் பெரும்பான் மையாக 6 நீதிபதிகள் அளித்துள்ள இந்த தீர்ப்பு வந்த பிறகு அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடித்தட்டு மக்களுக்கான நியாயத்திற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
ஒன்றிய பாஜக கூட்டணி அரசைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பை அமலாக்காமல் கிடப்பில் போட முயற்சிக்கிறது; இந்த சலுகை உண்மையிலேயே எல்லோருக்கும் பயனளிக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.
கலைஞருக்குப் பெருமை
இந்த நாட்டில் ஏழை விவசாயி, விவசாயத் தொழி லாளி கையில் என்றைக்கு நிலம் கிடைக்கிறதோ அன்றைக்குத் தான் இந்திய சமூகத்தில் மாற்றம் ஏற்படும். அந்த மகத்தான போராட்டத்தை நோக்கித் தான் நாம் முன்னேற வேண்டியிருக்கிறது.
எப்படி இந்த இடஒதுக்கீடு கிடைக்க நாம் போராடி னோமோ, அதைப் போல மற்ற அமைப்புகளுடன் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண் டும். இந்த சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அவருக்கு எங்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் கோரிக்கை வைத்து போராடினாலும், அந்த கோரிக்கையை ஏற்று அதனை சட்டமாக்கிய பெருமை கலைஞருக்கு உண்டு. இது தொடர்பாக ஜனார்த்தனம் கமிட்டியை அமைத்தார். ஜனார்த்தனம், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் அல்ல. இதர பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சார்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் இந்த இடஒதுக்கீடு அமுலாக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம் ஜனார்த்தனம் கமிட்டியின் ரோஸ்ட்டர் முறை தான்.
முதல்வருக்கு வேண்டுகோள்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவி விடக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்ற வழக்கறி ஞர்கள் வில்சன் போன்றவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்ததன் மூலம் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த உள் ஒதுக்கீட்டின் முழுமையான பலன்கள் அருந்ததிய மக்களுக்கு கிடைக்க தேவையான சட்ட முன்வடிவுகளை நீங்கள் ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞர் கொண்டு வந்த சட்டம், அதை நிறை வேற்றும் போது தான், முழுமையடையும்.
மேலும் சமூகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் இடஒதுக்கீடு என்பது மட்டுமே நிரந்தரத் தீர்வு அல்ல. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பும், அரசுப் பணியி டங்கள் அனைத்தையும் நிரப்புவதும், தனியார் நிறுவ னங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்குவதும் போன்ற நடவடிக்கைகள் உடனடித் தேவை.
சாதிய சக்திகளுக்கு முடிவு கட்டுவோம்
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி இந்த உள் ஒதுக்கீட்டை பெற்றிருக்கிறோம். இந்த ஒதுக்கீட்டின் சலுகைகள் முழுமையாக கிடைக்க தேவையான நடவடிக்கையை தொடரு வோம். அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து; வர்ணாசிரம அதர்மத்தை எதிர்த்து இந்த நாட்டில் சாதிய, மதப்பிரிவினையை வைத்து அரசியல் நடத்தக்கூடிய பிரிவினை சக்திக ளுக்கு முடிவு கட்டுகிற பயணத்தை நாம் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அதில் மகத்தான பெருமை என்னவென்று சொன்னால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதர பகுதி மக்களையும் திரட்டிப் போராடுகிற இயக்கம். இந்த செங்கொடி இயக்கம். சாதி அடிப்படையிலான இயக்கம் அல்ல. தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சாதிய அடிப்படையில் பிரித்து விடக்கூடாது; சாதியாக பிரிந்திருந்தாலும் கூட தொழி லாளி வர்க்கத்தின் அங்கங்கள் என்கிற அடிப்படை யில் ஒன்றிணைக்கிற மகத்தான பணியை மார்க்சி ஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தியிருக்கிற கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழு விற்கு மாநிலக்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு: இலமு, திண்டுக்கல்.