articles

img

‘போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது’

சென்னை, மார்ச் 14- கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என அ.சவுந்தர ராசன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.  போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணி யில் உள்ள, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை மாநாடு சென்னையில் செவ்வாயன்று (மார்ச் 14) நடைபெற்றது. உதவித் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வர வேற்றார். கோரிக்கைகளை விளக்கி தீர்மானத்தை முன் மொழிந்து பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் பேசினார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன், சிஐடியு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்ஸன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சம்மேளன பொருளாளர் வி.சசிக் குமார் நன்றி கூறினார்.  இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அ.சவுந்தரராசன் பேட்டி 

மாநாட்டின்  கோரிக்கைகளை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழ கங்கள் அரசுக்கு சொந்தமான முக்கிய பொதுத்துறை நிறுவனமா கும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகம் முழுவ தும் இரவு பகல் என 24 மணி நேரமும் இயங்கி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. கிராமப்புறம் மற்றும் மலை வழித் தடங்களில் இயங்கும் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் லாப நோக்கமின்றி. சேவை’ நோக்கத்தோடு இயக்கப்படுகின்றன.

கட்டணமில்லா பேருந்து சேவை

மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள். முதிய வர்கள் என சமூகத்தின் பல்வேறு பகுதியினருக்கு கட்டண மில்லா பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட் டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து கழகங்களின் சிறப்பான சேவை காரணமாக உள்நாட்டு உற்பத்தி உயர்விலும் போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த போக்குவரத்தை எப்படி மேம்படுத்தலாம் விரிவு படுத்தலாம் என்று அரசு சிந்திக்க வேண்டுமே தவிர, மாறாக பேருந்துகளை குறைத்து தனியாரிடம் ஒப்படைக்கலாமா என்று சிந்திக்கக் கூடாது. 

900 பேருந்துகளை இயக்காமல் இருப்பதா?

போக்குவரத்துத்துறை அமைச்சர் தனியாரிடம் ஒப்படைக் கும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளார். அந்த அறி விப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டு கோள். தற்போது டெண்டர் விடப்பட்டிருப்பது, பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருவது, வேலை நியமனத்திற்கு தடை விதித்திருப்பது, புதிதாக ஆட்களை நியமனம் செய்யாமல் இருப்பது, சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே 900 பேருந்துகளை இயக்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் போக்குவரத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்ற அறி விப்பை நம்பும் வகையில் இல்லை.  கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி பெற, மக்கள் வாழ்வா தாரம் பெருக பொது போக்குவரத்து பெரும் பங்காற்றியுள்ளது. எனவே புதிய பேருந்துகள் வாங்க வேண்டும், புதிதாக ஊழியர்க ளை பணி நியமனம் செய்ய வேண்டும், பராமரிப்புப் பிரிவில் போதிய ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். ஏற்கனவே நிறுத் தப்பட்டுள்ள பேருந்துகளை இயக்க வேண்டும். 

ஓய்வூதியர்களின் சிரமம்

கடந்த ஒப்பந்தத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பல சரத்து கள் அமலாக்கப்படாமல் உள்ளன. நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு 90 மாத அகவிலைப் படி வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் தற்போதிலிருந்தாவது அகவிலைப்படியை வழங்குங்கள் என்று கேட்டோம். அதை கடந்த ஒப்பந்தத்தின் போது ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதைகூட வழங்க மறுக்கிறார்கள். ஓய்வு பெறும் தொழிலாளிக்கு உடனடியாக பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை.  

முதலமைச்சர் தலையிடவேண்டும்

ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் துயரம் தோய்ந்த கோரிக் கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பணியில் உள்ள தொழி லாளர்களின் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து அரசு செலவு செய்துள்ளது. அந்த பணத்தை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் சமூகத்திற்காக இயக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வர வுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். ஒப்பந்த முறை இதற்கு தீர்வாகாது. எலக்ட்ரிக்கல் வாகனம் என்பது கட்டணத்தை உயர்த்தத்தான் உதவும். மேலும்  மாணவர்கள், மாதர்களின் சலுகைகள் பறிக்கப்படும். இது தனியார் கொள்ளையடிக்க வழிவகுக்கும். வருமானமற்ற வழித்தடங்க ளில் பேருந்து இயக்க மாட்டார்கள். எனவே முதலமைச்சர் நேரடி யாக தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்று அ.சவுந்தரராசன் கூறினார்.