திருப்பூர், ஜூன் 10- வளர்ர்ந்து வரும் திருப்பூர் மாவட்டத்தின் தேவைகளை உணர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகரம் வெகுவேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள் ளது. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து வருகிறது. புதியகுடியிருப்புகள் ஏராளமாக உருவாகியுள்ளது. ஆனால், முன்பிருந்த உட்கட்டமைப்பே இன்றும் மாநக ராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் தொடர்கிறது. எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவு உருவாக் கப்படவில்லை. இச்சூழலில் கல்வி, மருத்துவம், பேருந்து, சாலை, குடிநீர் போன்ற பிரச்சனைகள் அதிகளவில் மாநக ராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ளது.
கல்வி:
தற்போது 10 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப் பிற்கு செல்வதற்கு மாணவ, மாணவிகள் பெரும் பகுதி இடங்களில் அல்லாடிக்கொண்டு இருக்கின்றனர். குறிப் பாக, 8 கிலோமீட்டர் சுற்றளவில் மேல்நிலைப்பள்ளி இருந் தால், புதிதாக பள்ளி துவங்குவதில்லை என ஒரு விதியை அரசு உருவாக்கி வைத்துக்கொண்டு, இருக்கும் பள்ளி களில் அதிகப்படியான மாணவர்கள் வந்தால் சேர்ப்ப தற்கு இடம் இல்லை என நிராகரிக்கும் நிலை உள்ளது. புதிதாக துவங்கவும் வழியில்லாமல் கடும் பாதிப்பை மாண வர்கள் சந்தித்து வருகின்றனர். எனவே, தேவையான கூடு தல் கட்டட வசதி, ஆசிரியர்கள் மற்றும் கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் வடக்கு பகுதியில் புதியதாக பொறி யியல் கல்லூரி, பல் தொழில்நுட்ப கல்லூரி துவங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவம்:
தற்போது இல்லம் தேடி மருத்துவம் என்ற முறையில் மருந்து, மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஊழியர்கள் பற்றாகுறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருதயம், நரம்பு பிரச்சனைகளுக் கான மருந்துகள் அவ்வப்போது இல்லை என்கிற நிலை யில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் செல்லும் போது கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளிக்கப்பட்டும், நிரந்தர தீர்வை ஏற்படுத்தாமல் ஊரக நல மருத்துவப்பணிகள் துறை இழுத்தடிக்கும் நிலையே உள்ளது. உரிய பதில்களோ, போதுமான மருந்து கொள் முதல் செய்து இருப்பு வைப்பதற்கான ஏற்பாடு இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் பல ஆரம்ப சுகாதார நிலை யங்களில் உடனுக்குடன் மருந்துப்பொருட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது. மேலும், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பாக பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் வகையில் தரம் உயர்த்தி வட்டார மருத்துவமனையாக மாற்ற வேண் டும்.
ரேசன்:
மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில் பகுதிநேர கடைகளில் ஊழியர் பற்றாகுறை, வாடகை கடை, பொருள் இருப்பு வைப்பதில் பற்றாகுறை போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதுகுறித்து பிரச்சனை முன் னுக்கு வரும் கடை குறித்த விபரங்களை அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்றால். அப்போது தலையிடுகின்ற னர். அடுத்தடுத்த மாதங்களில் மீண்டும் பிரச்சனை தொடர் கிறது. தற்போது இதே கோரிக்கைக்காக சில இடங்களில் போராட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலும் நடத்தப் பட்டுள்ளது. மேலும், பொருள் ஒதுக்கீடு 40 முதல் 60 சதவிகிதம் வரை மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இடப்பற்றாகுறை கார ணமாக இருந்தாலும், இந்த நிலை உள்ளது. மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் செல்பவர்களுக்கு மட்டுமே, ரேசனில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் நிலை உள்ளது. இதர நேரங்களில் ஏதாவது ஓரிரு பொருட் கள் மட்டுமே கிடைக்கிறது. எனவே, அனைத்து பொருட்க ளும் கிடைக்க உரிய ஆவணம் செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்து:
திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக கோவை செல் லும் வழித்தடத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக் கிழமை இரவு, பண்டிகை நாட்களில் அரசுப்பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படாமல் மிகக்குறைவாக இயக்கப்படுகின்றன. இதனால் அன்றாடம் வேலை, மருத்து வமனை மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய நூற்றுக் கணக்கானவர்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்படு கின்றனர். இது ஒவ்வொரு வாரமும் தொடர் கதையாக உள் ளது. அதேபோல் சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு இயக் கப்படும் புறநகர பேருந்துகளும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு விட்டதால் கிராமப்புற மக்களும் பெரும் சிரமப்படுகின்றனர். உதாரணமாக 26 ஏ, 15ஏ, பி9, 9ஏ, 17 போன்ற நகர்ப்புற பேருந்துகள் கூடுதல் நடைகள் இயக் கப்பட்ட நிலையில் சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் நிறுத்தியதை திரும்ப இயக்காமல் உள்ளனர். காரணம் கேட்டால் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் நட்டம் ஏற்படுகிறது. எனவே, நடைகளை குறைத்து விட்டோம் என காரணம் சொல்கின்றனர். மேலும், பேருந்துகளில் பெண் கள் இலவச பயணம் மேற்கொள்பவர்களிடம் பல நடத்து நர்கள் தகாத வார்த்தைகளை கூறுவதும், அவமானழு படுத்துவதும், பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் தள்ளிப்போய் நிறுத்துவதும் என நடைபெறுகிறது. இவற்றின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விசயத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் பாராமுகமாக உள்ளனர். ஏற்கெனவே நகர, கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் நிலையில், இருக்கும் பேருந் துகளையும் இயக்காமல் நிறுத்துவது கடும் பாதிப்பை ஏற் படுத்தும். குறிப்பாக, போக்குவரத்துக் கழகத்தில் போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாத நிலை யில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே அரசு நிர்வாகம் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தேவையான எல்லா ஊர்களுக்கும் பேருந்துகளை முழுமை யாக அனைத்து வழித்தடங்களிலும் இயக்க வேண்டும்.
ரயில்வே:
அதேபோல், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு உரிய ரயில்களை முழுமையாக இயக்கா மல் அடிக்கடி ஏதேனும் காரணம் சொல்லி நிறுத்தி விடுகின் றது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயல் தனியார் பேருந்து கள் லாப நோக்கத்திற்கு மறைமுகமாக உதவி செய்வதாக உள்ளது. கோவை – சேலம் பயணிகள் ரயில் இந்த வழித் தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு மட்டுமின்றி இடையில் உள்ள சிற்றூர்களுக்கும் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், இந்த ரயிலை அடிக்கடி நிறுத்தி விடு கின்றனர். ரயில்வே பராமரிப்புப் பணிகளுக்காக இந்த ரயிலை நிறுத்துவதாக சேலம் கோட்ட நிர்வாகம் கூறுகி றது. ஆனால், நிர்வாக ரீதியாக உரிய பராமரிப்பு நடைமுறை கள் இருக்கும் நிலையில், இதுபோல் பல நாட்களுக்கு, சில சமயம் வாரக்கணக்கில் இந்த ரயிலை நிறுத்திவிடு வது பொருத்தமான காரணமாகத் தெரியவில்லை. இந்திய முழுவதும் ரயில்வே துறையில் 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழ்நிலை யில் ரயில் பயணிகளுக்கு உரிய சேவைகள் வழங்கு வதில் பலவித பாதிப்புகள் உள்ளன. பலமுறை சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை. எனவே, மாவட்ட நலன் கருதி மாவட்ட நிர் வாகமும் இந்த பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கொண்டு சென்று சேலம் கோட்டத்தில் கோவை – சேலம் பயணிகள் ரயிலை சீராக தொடர்ச்சியாக இயக்குவதற்கு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர்:
திருப்பூர் மாநகரப் பகுதியின் தெற்கு பகுதியில் குடிநீர் விநியோகம் தற்போதும் 10 நாட்கள், 12 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பிரச்ச னையை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லும் போது மட்டும் உடனே குடிநீர் வழங்குவது உள்ளது. அதே போல் புதிய குழாய் பதிக்கிறோம், ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ஏராளமான நீர் வீணாகிறது; விநியோகம் பாதிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் லாரிகள் மூலம் மாற்று ஏற்பாடாக குடிநீர் வழங்க திட்டமிட வேண்டும். குடி நீர் பிரச்சனையால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக் கான பிரச்சனையாக மாறுகிறது. அதிகாரிகள் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் போராட்ட அறிவிப்புகளுக்கு பின்பு சமாளிக்கும் வேலையை தான் செய்கிறார்கள். மாநகர மேயரே அதிகாரிகள் வேலை செய்வதில்லை என ஆய்வு கூட்டத்தில் பேசியது பத்திரிக்கைகளில் வந்த செய்தி.
சாலைகள்:
அதேபோல் பெரும் பகுதி மாநகரத்தின் சாலைகள் குண்டும், குழியுமாக (மரணக்குழிகளாக) உள்ளன. சாலைப்பணிகளுக்கு ஒப்பந்த எடுத்தவர்கள், முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை. தரமான முறையில் பணியை மேற்கொள்ள அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏராளமான விபத்துகள் ஒவ்வொரு சாலையிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் தினந்தோறும் ஏரா ளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநக ரப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைகள் படு மோசமாக காட்சியளிக்கிறது. அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய படகுவிடும் போராட்டம் அனைத்து பத்தி ரிக்கைகளில் செய்தியாக வெளியாகியுள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார சாலையை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த சாலைகளின் தரத்தை உயர்த்துவதும், அகலப்படுத்து வதும் அவசியமாகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு பகுதி களை இணைக்கும் மேம்பால பணிகள் நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் பணிக ளும் ஆமை வேகத்தில் உள்ளது. இதனை வேகப்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் திருப்பூர் மாநகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் நிலவு கிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்டத்தில் நிலவும் இதர பிரச்சனைகள்
மாவட்டத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அளிக்கப்படும் திட் டங்களுக்கு உரிய நிதி மதிப்பீடு, திட்ட மதிப்பீடு அளிக்க வேண்டிய துறைகள் கால தாமதம் செய்வதும், சம்மந்தபட்ட மக்கள் பிரதிநிதிகளே ஒவ்வொரு முறை யும் அதிகாரிகளிடம் நேரில் பேசினால் மட்டுமே கோப்பு களை நகர்த்தும் நிலை உள்ளது. அப்பகுதி மக் களோ, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளோ செல்லும் போது உரிய மரியாதை அளிப்பதில்லை. ஒப்பந்தங் கள் விடுவதில், அதனை முறைப்படுத்துவதில் வெளிப் படைத் தன்மையாக நடக்க உரிய வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரண லாயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகா மையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளை முறைகேடாக ஏற்க னவே இருந்த மாவட்ட நிர்வாகம் (விஜய கார்த்திகே யன் மாவட்ட ஆட்சியர் காலத்தில்) நிலங்கள் வழங் கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே இதில் உரிய தலையீடு செய்து மாவட்ட நிர்வாகம் பறவை கள் சரணலாயம் முழுமையாக அமைய முறைகேடாக வழங்கப்பட்ட நில ஆவணங்களை ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
திருப்பூர் புஷ்பா தியேட்டர் முதல் பெருமாநல்லூர் சாலையில் பாண்டியன் நகர், அவிநாசி சாலையில் அனுப்பர்பாளையம் வரையிலும் பறக்கும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்ட மாக பெருமாநல்லூர் சாலையில் மாதிரி ஆய்வுகள் முடிந்த நிலையில் அப்பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் டாக்டர் கலைஞர் பேருந்து நிலை யம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப் பட்டுள்ள பாலத்திற்கு கீழே உள்ள பகுதியை மாநக ராட்சி நிர்வாகம் வாகன நிறுத்தமாக அறிவித்து வாடகை கட்டணம் வசூலிப்பதற்கு குத்தகைக்கு விட்டுள்ளது. ஏற் கெனவே இங்கு வாகன நிறுத்தம் என வாடகை வசூ லிக்க முடிவு செய்து அறிவித்தபோது ஆரம்ப நிலையி லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் பகுதியில் மாநக ராட்சிக்குச் சொந்தமில்லாத, நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை வாகன நிறுத்தமாக பிரித்து வாடகை வசூலிப் பது வணிகநோக்கம் கொண்டது. இதை ஏற்க முடி யாது. சீரான போக்குவரத்துக்கு அந்த இடத்தை முறை யாக பயன்படுத்த வேண்டும். பேருந்து நிலையம் அருகி லேயே வாகன நிறுத்த வளாகம் சீர்மிகு நகரம் திட்டத் தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில், சாலையோரம் நிறுத் தப்படும் வாகனங்களுக்கு வாடகை வசூலிப்பதைக் கைவிட வேண்டும். இதனை மாநகராட்சி தீர்மானத்தை, ஒப்பந்தத்தை ரத்து செய்ய உரிய சட்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.